செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த தட்டச்சுப் பணிகள் இன்று மறைந்துவிட்டன. தட்டச்சு வேலைகள் எப்படி மாறி இன்றைய புதிய வேலைகளாக மாறியுள்ளது? இன்றைய புதிய வாய்ப்புகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவிட்டால், இன்றைய அலுவலக வேலைகள் மறைந்து விடுமா? பரவலான வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கக் கூடும். இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்

 

புதிய தமிழ் தொழில்நுட்ப யூடியூப் சானல் அறிமுகம்

தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் பற்றிய எளிய அறிமுக விடியோ சானல் இது. தாராளமாக எல்லா வயதினருக்கும் பொருத்தமான சானல். குறிப்பாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தச் சானல் மூலம் பயன் பெறுவார்கள் என்று நினைக்கிறேன்.

இதற்கு நல்ல வரவேற்பிருக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் இந்த சேனலை subscribe செய்யுங்கள்.

உங்களது கருத்துக்களை தமிழிலோ, அல்லது ஆங்கிலத்திலோ பதிவு செய்யுங்கள்.

என்னுடைய பல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளை இங்கே நீங்கள் படிக்கலாம்:

https://thamizhnutpam.wordpress.com/

இந்திய அடுக்கு – நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

இந்தியாவில், உலகெங்கும் இருப்பது போல, வங்கிகள் பணம் மாற்றிக் கொள்ள மற்றும், நுகர்வோர் பணக் கொடுக்கல்/வாங்கலுக்கு பலதரப்பட்ட மின்னணு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

 

ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவினுக்கே (organized economic sector) பயனளித்தது. இந்தியப் பொருளாதாரத்தின் வெறும் 2% மட்டுமே இதிலடங்கும். எஞ்சியிருக்கும் பொருளாதாரம், ரொக்கத்தை (cash) நம்பியே இயங்கி வந்துள்ளது. இதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய விஷயங்கள்:

  1. ரொக்கம் என்பது ஒரு சேவை முடிந்தவுடன் உடனே கைமாறும்
  2. மிக எளிதாக வங்கியில்லாத இடத்திற்கெல்லாம், பயன்படும் கருவி ரொக்கம்

இவ்வளவு பெரிய இந்த ரொக்கப் பொருளாதாரத்தை எப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவது? அத்துடன், அரசு மானியம், மற்றும், மக்கள் நலக் கொடுக்கல்/வாங்கலை எப்படி ரொக்கப் பொருளாதாரத்திலிருந்து விடுதலைச் செய்வது?

கிராமங்களில் இன்று நிச்சயமாக இருக்கும் இரண்டு விஷயம் – தபால் நிலையம் மற்றும் செல்பேசிகள். செல்பேசிகள் தபால் நிலையம் இல்லாத சில இடங்களிலும் உண்டு என்ற நிலை வந்துள்ளது.

வேறு விதமாகச் சொன்னால், இந்தியாவில் எந்த ஒரு புதிய பொருளாதார முயற்சியும் ரொக்கப் பொருளாதாரத்துடன் போட்டியிட வேண்டுமானால், முக்கியமாகச் சிந்திக்க வேண்டியத் தேவைகள்:

  1. ஐந்து வினாடிக்குள் ஒரு சேவை நிகழ்ந்தவுடன், பாதுகாப்பாக, பணம் கைமாற வேண்டும்
  2. எல்லா வித செல்பேசி, தபால் மற்றும் வங்கிகளுடனும் வெகு எளிமையாக, ஆனால் கட்டணமின்றி இந்தப் பரிவர்த்தனை நிகழ வேண்டும்
  3. இந்தியர்கள் செல்பேசி நிறுவனங்களுடன் பெரிதாக விசுவாசம் காட்டுவதில்லை. எந்த நிறுவனம் எந்தத் தருணத்தில், எங்கு நல்ல ஒரு திட்டம் தருகிறதோ, அவர்களுக்கே இந்தியர்களின் அந்நாளைய விசுவாசம். நல்ல வேளையாக, இந்திய அரசாங்கம், மேற்குலகைப் போல, குடிமக்களை செல் நிறுவனகங்களுடன் சட்டங்களால் கட்டிப் போடவில்லை. நிதி நிறுவனங்களும் செல்பேசி நிறுவனகங்கள் போல எளிதில் மாற்றக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

 

 

உலகில் இன்று இது நிகழும் ஒரே நாடு இந்தியா. இதற்கு UPI மற்றும் ஆதார் என்ற அருமையான முயற்சி அடிப்படை என்று பார்த்தோம். உலகில் எந்த ஒரு நாட்டிலும் அவ்வளவு எளிதாக பண மாற்றம் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு உடனே மாற்றல் என்பது அவ்வளவு எளிதல்ல.  அத்துடன் விசா/மாஸ்டர் போன்ற அமைப்புகள் பெரு வியாபாரிகளுக்கு உதவினாலும், சின்ன வியாபாரிகளுக்கு இவர்களின் மூன்று/நான்கு நாள் பணப் பரிமாற்றத் தாமதம் ஒரு பெரிய தடைக்கல். இதனாலேயே விசா/மாஸ்டர் போன்ற அமைப்புகள் இந்திய கிராமப் பகுதிகளில் அதிகம் காலூன்றவில்லை. இன்று, இந்தியர்கள் மெதுவாக, ப்ளாஸ்டிக் கார்டுகளைத் துறந்து பல நிதிப் பரிவர்த்தனைகளை செல்பேசியிலேயே செய்யத் தொடங்கி விட்டார்கள். அரசாங்கமும், மானியம் மற்றும் மக்கள் நலக் கொடுக்கல்/வாங்கல் விஷயங்களை நேரடியாகச் செய்யத் தொடங்கிவிட்டது. இதற்கு அர்த்தம், ரொக்கம் முழுவதும் மறைந்துவிட்டது என்பதல்ல. பிரச்னையை இந்த நிதிப் புரட்சியின் வடிவமைப்பாளர்கள் ஒழுங்காகப் புரிந்து கொண்டுள்ளார்கள். ரொக்கம் முழுவதும் மறைந்து, ஒழுங்குபடுத்தப்பட்டப் பொருளாதாரத்திற்குள் பெரும்பான்மை இந்தியர்கள் வருவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகலாம். ஆனால், முதன் முறையாக, மேற்குலகைக் காப்பியடிக்காமல் இந்தியப் பிரச்சினைக்கு ஒரு அருமையான இந்தியத் தீர்வு கண்டுள்ள இந்த நிதிப் புரட்சியின் வடிவமைப்பாளர்களை எத்தனைப் பாராட்டினாலும் போதாது. இந்த நிதிப் புரட்சி இந்தியாவில் இப்பொழுதுதான் ஆரம்பமாகி உள்ளது. இதன் வீச்சு, இந்தியப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் சக்தி கொண்டது.

நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

இந்திய நிதிப் புரட்சி இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய முயற்சிகள் முழுவதும் பயனளிக்க இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  1. தனியார் வங்கிகள், UPI மூலம் பல சேவைகள் அளித்தாலும், இதில் அதிகம் காசு பண்ண முடியாது என்று அறிந்துள்ளது. இதனால், இவர்கள் மிக முக்கியமாக, ஒரு புதிய சிந்தனையுடன் வங்கி வியாபாரத்தை அணுக வேண்டும். அதாவது, கட்டணம் வசூலித்துப் பழகிய வங்கிகள் கட்டணத்திற்கு பதில் வேறு வழியைக் காண வேண்டும். நுகர்வோர் விட்டுச் செல்லும் டிஜிட்டல் தடையங்கள் நாளைய வருமான வழிகாட்டிகள். இதற்கு, தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தை முழுவதும் புரிந்து கொண்ட தனியார் வங்கிகள் வெற்றி பெரும். மற்றவை தடுமாறும். முதல் முயற்சிகள் அதிகப் பயனில்லாமல் போகலாம் – இதற்கும் தயாராக இருக்க வேண்டும்
  2. அரசு வங்கிகள், பழைய முறைகளைத் துறந்து, புதிய UPI சேவைகளுடன் போட்டி போட வேண்டும். இங்குத் தொழிற்சங்கம் ஒரு இடையூறாகவும் இருக்கலாம். இந்த மாற்றத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது அரசு வங்கிகள் என்பது என் எண்ணம். ஆனால், ஒரு முக்கிய முன்னேற்றம் அரசு வங்கிகளைக் காப்பாற்றும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது. இந்திய கொடுக்கல்/வாங்கல் சேவைகள் சந்தை ராட்சச வேகத்தில் விரிவடையும். இந்த விரிவடைப்பில், அரசு வங்கிகளும் பயன்பெறும். ஒரே குறை, விரிவான சந்தையில் அரசு வங்கிகளின் பங்கு, தனியார் வங்கிகளை விடக் குறைவாகவே இருக்கும்
  3. ஆர்.பி.ஐ., Payments Bank என்ற அமைப்பை 2014 முதல் அனுமதித்தது. இது போன்ற அமைப்புகள், கடனளிப்பு, மற்றும் சில விஷயங்களைத் தவிர, வங்கிகள் போல செயல்படலாம். இதில் முக்கியமாக, இந்திய தபால், ஒரு Payments Bank –ஐத் தொடங்கியுள்ளது. பீகார், ஒடிஸா போன்ற மாநிலங்களிலிருந்து கட்டட வேலை போன்ற சிறு வேலைகளை, மும்பய், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் செய்கிறார்கள்.  இவர்கள் பொதுவாக, தங்கள் கிராமத்திற்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்புகிறார்கள். இதற்கும் சில நாட்கள் பிடிக்கிறது. இந்தியத் தபால் 150,000 அலுவலகங்களுடன் இயங்கும் ஒரு பெரிய அமைப்பு. எந்த வங்கிக்கும் இத்தனைக் கிளைகள் இல்லை. இந்தியத் தபாலின் IPPB, மணியார்டர் விஷயத்தைத் தொழில்நுட்பம் கொண்டு தலைகீழாக மாற்றும் என்ற நம்ப வாய்ப்பிருக்கிறது. (IPPB – India Post Payments Bank). IPPB –யிடம் மற்ற வங்கிகளைப் போல ATM உண்டு, ATM card உண்டு, இவர்களிடம், வங்கி தொடர்பாளர்களும் (banking correspondents) உண்டு. வெறும் 15 நிமிடத்தில் UPI/Aadhaar செல்பேசி கொண்டு, பணம் மும்பயில் கட்டியவுடன், ஒரு சின்ன ஒடிஸா கிராமத்தில் குடும்ப உறுப்பினர் கையில் கிடைக்கும். இது இன்று சாத்தியம். இதற்கான கட்டணம், மணியார்டரை விட வெகுக் குறைவு. IPPB இன்னும் தன்னுடைய 150,000 கிளைகளிலும் எல்லா சேவைகளையும் அளிக்கத் தொடங்கவில்லை. இன்னும் 2 ஆண்டுகளில் இது ஒரு பெரிய இயக்கமாக மாற வாய்ப்பிருக்கிறது
  4. BBPS (Bharat Bill Payment System)  என்ற அமைப்பைப் பற்றி முன்னமே பார்த்தோம். இதன் பயனை முழுவதும் இந்திய வியாபாரங்கள் இன்னும் பெறவில்லை. இன்றைய அதிகபட்சப் பயன், இந்த சேவையைப் பயன்படுத்திச் சில மின்சாரம், தண்ணீர், வீட்டு வரி போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதோடு சரி. இன்னும் வியாபார பொருள் விவரப் பட்டியல்களை (invoices) வியாபாரிகள் அதிகம் இந்த எளிய முறையைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இந்திய அரசாங்கத்திடம் இன்னும் மக்களுக்கு தன்னுடைய வியாபார விஷயங்களை முழுவதும் பகிரும் அளவுக்கு நம்பிக்கை வளரவில்லை. ஆரம்பத்தில், UPI  கொடுக்கல்/வாங்கல் சேவைகள் மீதும் நம்பிக்கையின்மை இருந்தது உண்மை. BBPS மீது நம்பிக்கை வளரத் தொடங்கினால், இந்தியாவின் 70 மில்லியன் வியாபாரங்களில், ஒரு 25% பங்கெடுத்தாலும், உலகின் மிகப் பெரிய வியாபார கொடுக்கல்/வாங்கல் அமைப்பாக இது மாற வாய்ப்புண்டு. ஏனென்னில், 17 மில்லியன் வியாபாரங்கள் வருடம் ஒன்றைக்கு, தலா 1,000 பொருள் விவரப் பட்டியல்களை இந்த அமைப்பு மூலம் சரி செய்து கொண்டால், 17 பில்லியன் பொருள் விவரப் பட்டியல்களை இந்த அமைப்பில் காடுகளை விடுதலை செய்யும். காகிதம் தேவையிருக்காது. வியாபார வருமான வரிக்கும் இது ஒரு அருமையான வழி. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் சில சட்டங்கள், மற்றும் ஊக்கம் மூலம், இந்த மின்னணு  நெடுஞ்சாலையில் இந்திய வியாபாரங்கள் பயணிக்கும் என்று நம்பலாம். இது UPI புரட்சியை விடப் பன்மடங்கு பெரிது. இந்த நம்பிக்கைக்குக் காரணம், இந்திய வியாபாரங்கள் மிக வேகமாக மாறும் தன்மை கொண்டவை – இதில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளை உடனே கண்டு கொள்வார்கள்.

 

சிறு வியாபாரங்களை இந்த முன்னேற்றம் சென்றடைய வேண்டும். இதற்கு, பல ஐடியாக்களும், சில முதல் முயற்சிகளும் ஆரம்பித்து விட்டது என்றாலும், இதில் இன்னும் சில தடைகள் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், வங்கிகள் இன்னும் இந்த இந்திய அடுக்கைப் பயன்படுத்தி சிறு வியாபாரங்களுக்குக் கடன் வழங்கத் தொடங்கவில்லை. அத்துடன், சிறு வியாபாரங்களும், ரொக்கத்திலிருந்து விடுபட்டு, மின்னணு முறைகளை முழுவதும் அரவணைக்கவில்லை. இது மிக அவசியம் உடனே நிகழ வேண்டும். நாளொன்றுக்கு, 10% முதல் 30% வட்டி கொடுத்து பல சிறு வியாபாரிகள் இந்தியா முழுவதும் அல்லாடுவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். இந்திய அடுக்கை, சிறு வியாபாரிகள் கடன் விஷயத்தில் பயன்படுத்தத் தொடங்கினால், மிகப் பெரிய சமூக மாற்றம் இந்தியாவில் உண்டாகும்.

 

 

இதுவரை நாம் பார்த்த எல்லா இந்திய அடுக்கின் அரவணைப்புகளும், தனியார், பொது வியாபாரங்கள், மற்றும், தனிநபர்களிடமிருந்து வந்தவை. இந்திய அரசாங்கம், சமூக மற்றத் திட்டங்கள் மற்றும் மானிய பட்டுவாடா விஷயத்தில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. விவசாய ஊக்கப் பணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் போன்ற விஷயங்களில் இடைத் தரகர்களை விடுவிக்க அரசாங்கம் இந்த இந்திய அடுக்கை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அரசாங்க நிலச் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்த இந்திய அடுக்கில் உள்ள டிஜிட்டல் பெட்டகம் மூலம் கொடுக்கல்/ வாங்கல்/ பதிவு விஷயங்களை முழுவதும் கொண்டு வந்துவிட்டால் லஞ்சம் வெகுவாக குறைந்துவிடும். அத்துடன் நகராட்சிகள் இந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இன்னும் 5-8 வருடங்களில் இவை நடக்கும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது.

கடைசியாக மிக முக்கியமான விஷயம், இந்தத் தொழில்நுட்பம் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு, அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயன்பாட்டாளர்களுக்கு அதிகம் பயிற்சி அளிக்கப்படவில்லை. வணிக நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் அரசாங்கமும் பயிற்சியை துச்சமாக நினைக்கக் கூடாது. என்னதான் தொழில்நுட்பத்தில் வல்லவர்களாக இருந்தாலும், பயிற்சி விஷயத்தை ஒதுக்குதல் தவிர்ப்பது நல்லதல்ல

முடிவுரை

எந்த ஒரு ராட்சச ப்ராஜக்டிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். இன்று உலக வணிகத்திற்கே முக்கியமான பனாமா கால்வாயைக் கட்டுகையில் 10,000 மனிதர்கள் பணியில் இறந்தார்கள். தேடிப் பிடித்து ஆவணப் படத்தைப் பார்ப்பவர்களைத் தவிர, இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. பனாமாவை விடப் பெரிய சாதனை இந்த இந்திய அடுக்கு. முதலில் நம்ப மறுத்த மேற்குலகம், Forbes, Fortune, Harvard Business Review, Wharton Business School என்று படிப்படியாக இதை ஆராயத் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவால் இதெல்லாம் சாத்தியமா என்று சொன்னவர்கள் இன்று அதிகம் பேசுவதில்லை. பொதுவாக, மற்ற அரசாங்கங்கள் பொறுத்திருந்து இந்திய சோதனை வெற்றி பெற்றபின் பார்க்கலாம் என்றே இயங்கி வருகிறார்கள். பொதுவெளியில் மேற்குலகால் இவ்வளவு வேகமாய் செயல்பட இயலாது. அதற்கான தொழில்நுட்ப வல்லமையும் அவர்களிடம் இருந்தும், இவ்வாறு செயல்படுத்த தூரநோக்கு அவர்களிடம் இல்லை; அத்துடன் அரசியல் தலைமையின் முழு ஒத்துழைப்பும் மேற்குலகில் இல்லை. இந்தியாவின் அதிஷ்டமான விஷயம், நம் அரசியல்வாதிகள் எத்தனை ஊழல் புரிந்தாலும், நம்முடைய இளைஞர்களின் திறமை மற்றும் மேலாண்மை மீது இவர்களின் நம்பிக்கை வளர்ந்து கொண்டு வந்துள்ளதுதான்.

 

 

இரண்டாம் உலகப் போர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தவிடு பொடியாக்கியது என்பது சரித்திரம். ஆனால், இன்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் அந்த நாடு உலக அளவில் முக்கியத்துவம் இழக்கவில்லை – ஏன்? அதன் சண்டையிடும் ராணுவம் குறைந்திருக்கலாம். அதன் உலகளாவிய கட்டுப்பாடும் குறைந்திருக்கலாம். ஆனால், பல நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து உருவாக்கிய உலகத்தர அமைப்புகள் (world class institutions) அந்த நாட்டை உலக அளவில் முக்கியமானதாக்குகின்றன. பிரிட்டிஷ் உடல்நல முறைகள், பல்கலைக் கழகங்கள், அவர்களது சக்தி வாய்ந்த கப்பல்துறை, விஞ்ஞான ஆராய்ச்சி கழகங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சுதந்திர இந்தியாவில், பல உலகத் தர அமைப்புகள் உருவாகியது உணமை. ஆனால், பெருவாரியான இந்தியர்களை பயனடைய இவை உதவவில்லை. என் பார்வையில் ‘இந்திய அடுக்கு’ நாம் உருவாக்கிய உலகத்தர அமைப்பு. நம்முடைய அரசியல் நோக்குகளை அதன் மேல் பூசாமல், தொடர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளை நீக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த இந்திய அடுக்கு முயற்சி, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு அருமையான சுதந்திர, முன்னோடி இந்திய முயற்சியாக மலர வேண்டும்.

மேற்கோள்கள்

பல இணையதளங்கள், பத்திரிக்கைகளில் வந்தக் கட்டுரைகள் இந்தக் கட்டுரையின் ஆராய்ச்சிக்கு உதவியது. இந்த மேற்கோள்கள் இந்த முக்கிய இந்திய முயற்சியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன். சில சுட்டிகளுக்கு குறிப்புறையும் அளித்துள்ளேன்.

அடிப்படை விளக்கம்

  1. http://indiastack.org/ – இந்திய அடுக்கைப் பற்றிய அருமையான தளம், அருமையான கானொலிகள் உண்டு
  2. https://en.wikipedia.org/wiki/India_Stack
  3. https://www.slideshare.net/indiastack/india-stack-a-detailed-presentation
  4. http://www.livemint.com/Politics/afjuy0dHgS4beFggSTVddP/Aadhaar-20-Creating-Indias-digital-infrastructure.html
  5. https://www.linkedin.com/pulse/banking-india-stack-road-cashless-economy-prasanna-lohar/
  6. https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/20161014 1612hrs IPPB_Frequently Asked Questions 2 0.pdf – இந்திய தபால் துறையின் Payments Bank பற்றிய கேள்வி பதில்

விவரமான விளக்கங்கள்

  1. https://www.quora.com/What-is-India-Stack-How-is-it-going-to-impact-India-in-the-next-few-years
  2. http://www.cgap.org/blog/should-other-countries-build-their-own-india-stack
  3. https://medium.com/wharton-fintech/your-guide-to-upi-the-worlds-most-advanced-payments-system-b4e0b372bf0b – இந்திய சாதனையை அழகாக விளக்கும் ஒரு கட்டுரை
  4. http://www.cgap.org/photos-videos/india-stack-new-financial-inclusion-infrastructure
  5. http://www.cgap.org/blog/india-stack-major-potential-mind-risks
  6. http://mashable.com/2017/02/14/india-aadhaar-uidai-privacy-security-debate/#fyBOm47C1Oqg
  7. https://techcrunch.com/2016/06/14/indias-fintech-revolution-is-primed-to-put-banks-out-of-business/
  8. http://edugild.com/assets/img/medialogos/biometrics.pdf
  9. https://medium.com/wharton-fintech/the-bedrock-of-a-digital-india-3e96240b3718
  10. http://www.iamwire.com/2016/11/list-of-mobile-wallets-upi-payment-apps-in-india/145172
  11. https://www.youthkiawaaz.com/2016/06/nandan-nilekani-writes-about-aadhar-card/
  12. https://techcrunch.com/2013/12/06/inside-indias-aadhar-the-worlds-biggest-biometrics-database/

பின்னணி

  1. https://yourstory.com/2017/07/history-of-aadhaar/ – ஆதார் பின்னணி

செய்தித்தாள் கட்டுரைகள்

  1. http://www.thehindu.com/opinion/lead/Aadhaar-on-a-platform-of-myths/article13673159.ece
  2. https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/how-india-post-payments-bank-prepares-for-a-new-life-from-money-order-to-mobile-banking/articleshow/58917285.cms

ஆதார் பாதுகாப்பு விமர்சனம்

  1. http://www.cse.iitm.ac.in/~shwetaag/papers/aadhaar.pdf

மேற்குலகக் கருத்துக்கள்

  1. https://www.forbes.com/sites/abehal/2015/11/25/mapr-and-big-data-in-the-worlds-largest-biometric-database-project/#46579dbd2035 – Forbes
  2. https://www.forbes.com/sites/johnmauldin/2017/04/09/indias-tech-revolution-has-already-left-the-west-behind-its-the-best-investment-opportunity-now/2/#5a5e629c35a8
  3. http://uk.businessinsider.com/india-might-be-first-cashless-society-2017-6 – Business Insider
  4. http://www.icommercecentral.com/open-access/payment-systems-in-india-opportunities-and-challenges.pdf
  5. https://www.huffingtonpost.com/entry/why-were-excited-about-technology-stacks-for-financial_us_58add330e4b0598627a55f72 – Huffington Post
  6. https://hbr.org/2017/11/how-india-is-moving-toward-a-digital-first-economy
  7. http://knowledge.wharton.upenn.edu/article/mapping-indias-economic-future-jobs-productivity-and-banking-reform/?utm_source=kw_newsletter&utm_medium=email&utm_campaign=2017-12-14 – Wharton Business

எதிர்காலம்

  1. https://www.examrace.com/Current-Affairs/NEWS-Nine-Pillars-of-Digital-India-Important.htm – இந்திய அரசாங்க எதிர்காலத் திட்டம்

சொல்வனம் – மே  2018

இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்

இதுவரை இந்தக் கட்டுரைத் தொடரில், இந்திய அடுக்கின் மூன்று அடுக்குகளைப் பற்றி அலசினோம். இந்த மூன்று அடுக்கின் பலன்கள் ஏராளமாக இன்றே இந்தியா அனுபவித்துள்ளது. இதன் எதிர்காலம், இன்னும் பல சமூகப் புரட்சிகளைக் கொண்டுவரும். நாடு தழுவிய இந்த நிதிப் புரட்சியில் சர்ச்சைகள் ஏராளம். பல சவால்கள் நிறைந்த ஒரு மாபெரும் ப்ராஜக்ட், இந்திய அடுக்கு. எல்லாம் சுபிட்சம் என்று அர்த்தமில்லை. இதைப் பற்றியும் இந்தப் பகுதியில் அலசுவோம்.

பல இந்தியர்களுக்கு, ஏனோ இந்தியா ஒரு வல்லரசாகவில்லை என்ற ஏக்கம் இருப்பது சமூக வலைத்தளங்கள் மற்றும் 

பொது வெளிகளில் தெளிவாகத் தெரிகிறது. எந்த ஒரு நாடும் வல்லரசாக வேண்டும் என்று செயல்படுவது ஒரு நெடுங்கால நன்மை பயக்கும் விஷயமல்ல. இன்று உலகம் முழுவதும் அப்படி முயற்சி செய்த நாடுகளின் தடுமாற்றம் கண்கூடாகத் தெரிகிறது. முன்னாளைய இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா அந்தக் கனவுகளைத் துறந்து விட்டனர். மெதுவாக அமெரிக்காவும் அந்த நிலைக்கு வந்துவிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இன்று சைனா இந்த முயற்சியில் ஈடுபட்டாலும், அந்த நாடும் இந்த முயற்சிகளைத் துறந்துவிடக் கூடும். உலகின் சிறந்த நாடுகள் என்று பெயர் பெற்ற நாடுகளான, ஸ்வீடன், ஃபின்காந்து, டென்மார்க், கனடா போன்ற நாடுகள் கடந்த 60 ஆண்டுகளாக வல்லரசாகும் எந்த ஒரு நினைப்புடனும் செயல்படவில்லை. இந்த நாடுகளின் வெற்றி, தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”

இந்திய அடுக்கின் எதிர்காலம்

முதலில் சொல்லாமல் விட்டுப் போன சில இந்திய அடுக்கு விஷயங்களைப் பார்ப்போம்:

  1. ஒப்புதல் அடுக்கு (consent layer) – இந்த அடுக்கு, இன்னும் உருவாக்கத்தில் உள்ளது என்று சொல்லியிருந்தேன். 2017 –ல் முதன் முறையாக இந்த ஒப்புதல் அடுக்கில் ஒரு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. CBSE பள்ளிகளின் இறுதியாண்டும் மதிப்பெண்கள், மாணவர்களுக்குக் காகிதமாக வழங்கப் படவில்லை. மாறாக, இதை ஒரு டிஜிட்டல் பெட்டகத்தில் (digital locker) ஒரு மின்னணு ஆவணமாக வைக்கப்பட்டது. ஒவ்வொரு 12 –ஆம் வகுப்பு மாணவனும், தன்னுடைய செல்பேசி அல்லது கணினி மூலம் இந்த மதிப்பெண் தாள்களை தரவிறக்கிக் கொள்ளலாம். மேலும், சேர வேண்டிய கல்லூரிக்கு இந்த மின்னணு மதிப்பெண் தாள்களைப் பார்க்க அனுமதியும் அளிக்கலாம் – ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும். இவ்வாறு, இந்த மதிப்பெண் தாள்கள் வெகு எளிதாக எத்தனைப் பல்கலைக்கழகங்களுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அனாவசியமாக, நகல் எடுத்து, காடுகளை அழிக்க வேண்டாம். இது போன்ற அருமையான முயற்சிகள் மேலும் அடுத்த சில ஆண்டுகள் தொடரும்.
  2. ஒப்புதல் அடுக்கு, வீட்டுப் பத்திரம், ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு என்று முக்கிய ஆவணங்களுக்கு அடுத்தபடியாக ஒரு மின்னணு முறையாக மாற வாய்ப்பிருக்கிறது
  3. PayTM போன்ற பல சேவைகள் வந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் முழுமையடையவில்லை. இன்றைய 70 மில்லியன் பரிமாற்றங்கள், மாதம் ஒன்றிற்கு 200 மில்லியனாக 2020 –க்குள் உயரும். வியாபாரிகளும், நுகர்வோரும் இந்த நிதிப் புரட்சியின் முழுப் பயனையும் அனுபவிக்கையில், விசா போன்ற அமைப்புகள் இந்தியாவில் தொடர புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். முதன் முறையாக, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியப் புதுமைகளைக் கண்டுத், தங்களின் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  4. இந்திய அடுக்கின் இன்னொரு முக்கிய அடுத்த கட்ட முயற்சி, சாலைச் சுங்கம் வசூலிப்பதை எளிதாக்குவது. இது FasTag என்று சொல்லப்படுகிறது. RFID மூலம் இயங்கும் இந்த மின்னணு முறை, எல்லாவித வண்டிகளிலும் பயன்படுத்தலாம். வடகிழக்கு அமெரிக்காவில் இயங்கும் EzPass போன்ற அமைப்பு இது. அமெரிக்க மாநிலமான MA –வில் எல்லா வண்டிகளும் நெடுஞ்சாலையில் இந்தமுறையைப் பின்பற்றுகின்றன.

5. GST என்ற விற்பனை வரி, இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த முயற்சி அல்ல. ஆனால், இதன் பின் இயங்கும், ஒரு மிகப் பெரிய விற்பனை வரி சார்ந்த தரவு தளம், இந்திய வியாபாரத்தையே மாற்றும் சக்தி கொண்டது. BBPS (Bharat Bill Payment System) என்ற இந்த முயற்சி, மாதம் ஒன்றிற்கு 1 பில்லியன் மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை (electronic invoices) கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை இணையம், செல்பேசி, அல்லது, பின்தொடர் (offline) முறைகளில் தாக்கல் செய்யலாம். மேலும், வாடிக்கையாளர்களும், இந்த அமைப்பைக் கொண்டே பொருட்களுக்குப் பணமளிக்கலாம் (இந்திய அடுக்கின் காகிதமற்ற முறைகளைப் பின்பற்றலாம்). இதில் உள்ள அருமையான ஒரு தொலைநோக்கான விஷயம் என்னவென்றால், இந்த மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை ஒரு டிஜிட்டல் பெட்டகத்தில் (digital locker) தேக்கிக் கொள்ளலாம். வங்கிகளிடம் கடன் வாங்கும் பொழுது, வியாபாரங்கள் இந்திய அடுக்கின், ஒப்புதல் அடுக்கு (consent layer) மூலம், தங்களுடைய வியாபார விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். இதில் எங்கும் காகிதம் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில், உலகில் முதன் முறையாக இந்தியாவில் இந்த மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. இன்று ஏறத்தாழ 15 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகள் நாளொன்றிற்கு அரசாங்கத்திடம் (15 million authentication requests/day) முன்வைக்கப்பட்டு, சரியா, இல்லையா என்ற பதில் கிடைக்கிறது. இதன் பெரும் பயன்பாட்டாளர்கள்:

a. செல்பேசி நிறுவனங்கள்

b. பங்குச் சந்தை தரகர்கள்

c. வங்கிகள்

d. UPI மூலம் இயங்கும் சேவைகள்

7. மிக முக்கியமான இந்த முன்னேற்றங்கள் முழுவதும் இந்திய அரசாங்கத்தை அதிகமாக பாதிக்கவில்லை. இடைத் தரகர்களும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்வதால்தான் இந்திய குடிமகனின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பது உலகறிந்த ஒன்று. இந்திய அடுக்கு அரசாங்க சேவைகளுக்கு இன்னும் சில ஆண்டுகளில் பயனில் வந்தவுடன், இடைத் தரகர் என்ற ஒருவர் தேவையின்றிப் போவார்கள். இன்று, இந்திய அடுக்கின் வீச்சு, வியாபாரத்துடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இன்னும் சில வருடங்களில், இது இந்தியக் குடிமகனின் முக்கியக் கருவியாக மாறும் சக்தி கொண்டது

8. இந்திய வங்கி முறைகள் கடந்த 70 ஆண்டுகளாக நடந்த முறையிலிருந்து அதிகம் மாறவில்லை. இந்திய அடுக்கு, சாதாரணர்களுக்கு நியாய வியாபார வட்டி, செல்பேசி மூலம், நேரடி வங்கித் தொடர்பு என்று காகிதமற்ற ஒரு முறையை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் உருவாக்கிவிடும் என்று நம்பப்படுகிறது

9. செல்பேசி வசதி அதிகமில்லாத கிராமங்களில், ஒரு வங்கித் தொடர்பாளர் (banking correspondent), வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மின்னணு சேவை செயலாக்காளராக (electronic services enabler) இன்று பல கிராமங்களில் இயங்கி வருகிறார்கள். வங்கிகளின் நோக்கம் இன்று 4 கோடி குடும்பங்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வது. இதில் மிகப் பணக்காரர்கள், மற்றும் நடுத்தர வர்கத்தினர் அடங்கும். இந்திய அடுக்கு மூலம், வங்கிகள், மிகக் குறைந்த செலவில் இன்னும் 20 கோடி இந்தியக் குடும்பங்களுக்கு வங்கிச் சேவைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இது இன்னும் சில ஆண்டுகள் பிடித்தாலும், மிகப் பெரிய சமூக மாற்றத்தை இது உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

10. இந்திய வர்த்தகம், இன்றைய நிலையை விட, 10 முதல் 50 முறை இதனால் விரிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய அடுக்கு சர்ச்சைகள்

  1. முதலில் இந்திய அடுக்கின் நம்பகத்தன்மையைக் குறைத்த விஷயம், அதை உயர்த்தியவரின் செயலாலே வந்தது. நந்தன் நிலேகனி, 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டது ஏனென்று தெரியவில்லை. ஆனால், இவரின் வாழ்நாள் சாதனைகளை, தவிடுபொடியாக்கிய விஷயம், இவர் அரசியலில் ஈடுபட்டது. இன்று, அதிலிருந்து விடுபட்டு, பல அருமையான சாதனைகளை நிகழ்த்தினாலும், இந்த அரசியல் நிழல் அவரையும் , இந்திய அடுக்கையும் தொடர்வது மறுக்க முடியாத விஷயம்.
  2. சில தன்னார்வலர்கள் இந்த இந்திய அடுக்கை உண்மையாக்கக் கடுமையாக உழைத்தும், இவர்களின், வெளியுலக, ஆலோசனை நிறுவனங்கள் சற்று சந்தேகத்தை எழுப்புவது உண்மைதான். இந்திய அரசாங்கம், சில முக்கிய பதவிகளில், லாபத்திற்காக இயங்கும் வெளியுலக லாப ஆலோசனை பணிகளில் ஈடுபட ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அமெரிக்க லாபியிஸ்டுகள் போல ஆகிவிடும். அமெரிக்காவில் இன்று சட்டங்கள், பல பெரிய நிறுவனங்களைத் தாண்டி அமுல்படுத்துவதில் ஏராளமான சிக்கல் இருப்பது, இந்த லாபியிஸ்டுகள் செய்யும் நிழல் வேலைகளால் என்பது உலகறிந்த விஷயம்

இந்திய அடுக்கு, ஒரு ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனம் போல உருவாகிய ஒன்று. இதன் முக்கிய நல்முகம், இதனாலேதான், 8 ஆண்டுகளில், உலகில் எங்கும் நிகழாத நிதிப் புரட்சி இந்தியாவில் சாத்தியமானது. ஆனால், இந்த அணுகுமுறையின் முக்கியக் குறை, ஒரு பில்லியன் மக்களின் அந்தரங்கத்தைப் பற்றிய அதிகக் கவலையில்லாமல் செயல்படுவது. தொலிநுட்ப ரீதியில், ஆதார் மற்றும் இதர சேவைகள் மிகவும் பாதுகாப்பானவை என்பது உண்மை. ஆனால், இதில் சில குறைபாடுகள் இருப்பதும் உண்மை:
http://www.cse.iitm.ac.in/~shwetaag/papers/aadhaar.pdf – இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, அரசியல் சாயம் தடவாமல், குறைகளை முன்வைக்கிறது. 

a. வங்கிகள்/செல் நிறுவனகங்கள் போன்ற அமைப்புகள் ஆதார் அடையாளத்தைச் சரி பார்க்க UIDAI –யுடன், ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பந்தத்தின்படி, UIDAI இந்த அடையாளப் பணிகளை செய்ய அனுமதிக்கும். இவர்கள் AUA/ASA  என்று அழைக்கப்படுகிறார்கள். வங்கிகள் ஒரு வாடிக்கையாளரிடம் ஆதார் அடையாளத்தைப் பல விஷயங்களுக்காகக் கோரலாம். நீங்கள் புதிதாக கணக்கு தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக, கண்டிப்பாக வங்கி உங்கள் ஆதார் அடையாளத்தைக் கோரும். பிறகு, அந்த வங்கி மூலம், பங்குச் சந்தையில் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதற்காக மீண்டும் அந்த வங்கி உங்களிடம் கேட்டு உங்களது ஆதார் அடையாளத்தைப் பெற வேண்டும். ஆனால், ஏற்கனவே அவர்களிடம் உங்களது ஆதார் அடையாளம் இருப்பதால், அதையே பயன்படுத்த முயலலாம். உங்களது அனுமதியின்றி இதை அவர்கள் செய்யக் கூடாது. ஆனால். நடைமுறையில் எத்தனை வங்கிகள்/ செல் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என்பது தெரியாது. ASA அமைப்புகள் மீது திடீர் ஆடிட் செய்வது முக்கிய அரசாங்கப் பொறுப்பு

b.ஆதார் ASA அமைப்பில் இன்னொரு சிக்கலும் உள்ளது. ஒரு முக்கிய நபரின் ஆதார் எண் மற்றும் அவரது           அடையாளம் தவறான கைகளில் சிக்கினால், அவரது மற்ற நடவடிக்கைகளை அவரது எந்த அனுமதியுமின்றி சட்டப் புறம்பாக கண்காணிக்கும் முயற்சி. இதற்கும் ஒரே தீர்வு, இவ்வகை அமைப்புகளை திடீர் ஆடிட் செய்வது

c. இன்னொரு குறை, இந்த அமைப்புகளில் பணி புரிவோர் – அதாவது, UIDAI, NPCI, CCI போன்ற அமைப்புகள் – அங்கு வேலை செய்து கொண்டே அடையாள தில்லு முல்லுக்களைச் செய்வது. இந்தக் குறையை இயற்பியல் பாதுகாப்பு முறைகளைப் (Physical security measures) பின்பற்றி இந்த அமைப்புகளில் பணி புரியும் யாராக இருந்தாலும், சோதனைகளுக்கு உட்பட வேண்டும். இது ஒரு முக்கிய அரசாங்கப் பொறுப்பு

4. இந்திய வருமான வரிக்கு முக்கியமான விஷயம் PAN எண். ஆதார் அடையாளமும் PAN எண்ணையும் இணைக்க 2017 –ல் அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சி ஒரு குழப்பமான விஷயம். இணையம் வழியாக இரண்டையும் இணைக்க முற்பட்டாலும், பலரும் இதனால் அவதிப் பட்டார்கள். சரியாக ஒன்று சேர்க்கப்படாத தரவு ஒரு நுகர்வோர் பிரச்சினையல்ல. அரசாங்கப் பிரச்சினை. இந்திய மக்களிடம் இந்த தரவுக் கோளாருக்காக கட்டணம் வசூலிப்பது தவறு

5. இந்திய அடுக்கின் நன்மைகளை இன்னும் எளிமையாக விளக்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். இவர்கள் உருவாக்கும் persona based விடியோக்கள் முழுவதும் விஷயத்தை விளக்காமல் சும்மா பற்பசை விளம்பரம் போல காட்சியளிக்கிறது. இவர்கள் கலையுலக திறமைகளை இதற்காகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன்சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல்

தமிழ்ப் பரிந்துரை

India stack

இந்திய  அடுக்கு

Consent Layer

ஒப்புதல் அடுக்கு

Digital locker

டிஜிட்டல் பெட்டகம்

Banking correspondent

வங்கித் தொடர்பாளர்

Electronic services enabler

மின்னணு சேவை செயலாக்காளர்

Physical security measures

இயற்பியல் பாதுகாப்பு முறைகள்

சொல்வனம் – மார்ச்  2018

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு.

  1. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative).
  2. இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய தளங்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து, அந்த வசீகரத்தை, விளம்பரம் மூலம் பணமாக்கல். கூகிள், அமேஸான் மற்றும் ஃபேஸ்புக் இந்த வகையில் சேரும்.

இந்த முயற்சிகளுக்கெல்லாம் துணை போன இந்திய நிரலர்கள், இதில் பெரிதாகப் பயனடையவில்லை. அத்துடன், சாதாரண இந்தியர்களும் பெரிய பயனடையவில்லை. இதில் முக்கியமான விஷயம், இரண்டாம் தரத்தினர், நுகர்வோரை மிகவும் நெருங்கி விட்டனர். நுகர்வோரின் பயன்பாட்டு முறைகளை, அவர்கள் விட்டுச் செல்லும், டிஜிட்டல் தடயங்களை வைத்து, இன்னும் அவர்களது இணைய அனுபவத்தை வசீகரமாக்கினார்கள். இதற்கு, அவர்களிடம் உள்ள ஏராளமான நுகர்வோர் இணையத் தரவு (internet browsing data) உதவியது. இன்று கூகிள் மற்றும் அமேஸானிடம், அமெரிக்க அரசாங்கத்தை விட அதிகத் தரவு உள்ளது.

இந்திய அடுக்கிற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்த விஷயம்தான் இந்திய அடுக்கு என்னும் டிஜிட்டல் புரட்சி. அமெரிக்க மென்பொருள் முயற்சிகளில் திறன்பேசி ஒரு அங்கமாக இருக்கவில்லை. கணினி (மேஜை, மற்றும் லாப்டாப்) அமெரிக்க மென்பொருள் முயற்சியின் மையமாக உள்ளது. இந்திய டிஜிட்டல் முயற்சியின் மையம் திறன்பேசி. சாதாரண இந்தியர்களிடம் வியாபித்து இருக்கும் கருவி திறன்பேசி.

இந்திய அடுக்கு, ஒரு தேசிய முயற்சி என்பதால், இதனை உருவாக்கியவர்கள், எந்த ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தையும் முக்கியப்படுத்தவில்லை. உதாரணத்திற்கு, ஆதார் தரவுதளம், ஒரு திறமூல மென்பொருளையே பயன்படுத்துகிறது. அத்துடன், ஆதார் தொடர்பு யாவும் 2048 பிட் குறிமுறையாக்க, ஆனால், திறமூல மென்பொருள் நெறிமுறையையே பயன்படுத்துகிறது (2048 bit open source encryption algorithm).

 

ஆதார் எண்ணை ஒரு பயன்பாட்டாளர் சரியான அடையாளமா என்று கேட்கும் பொழுது, அந்தக் கேள்வி, ஒரு ஹடூப்/ ஹைவ் (Hadoop/Hive) என்ற தொழில்நுட்பம் மூலம் பதிலளிக்கப் படுகிறது. இதுவும் ஒரு திறமூல மென்பொருள். இவ்வகையில், இந்திய அடுக்கு, ஒரு திறமூல மென்பொருள் தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.

 

ஆதாரின் அடிப்படை, எந்த ஒரு சேவையும் உலகிலேயே மிக மலிவான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது. இதனால், உலகிலேயே மிகப் பெரிய தரவுதளம் ஆதார் மற்றும் அதன் மற்ற அடுக்குகள். இன்று இந்த தரவுதளத்தின் அளவு 10 பெடாபைட்டைத் (ஓராயிரம் டெராபைட் என்பது ஒரு பெடாபைட்- 2017/2018 -ல் வரும் சராசரி மடிக்கணினிகளில் 1 டெராபைட் என்பது சகஜம் ) தாண்டிவிட்ட்து. இந்திய அடுக்கின் முக்கிய சேவைகள் இலவசம் அல்லது, மிகக் குறைவான கட்டணம் தாங்கியது. கூகிளைப் போல, இந்தச் சேவைகளின் எதிர்காலம், நுகர்வோரின் தரவுகளில் அடங்கியுள்ளது. இந்திய அடுக்குகளின் பயன்பாட்டாளர்கள் நுகர்வோருக்கு இன்னும் வசீகரத்தை அவர்களது டிஜிட்டல் தடயங்களை (digital footprint) வைத்து அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் ஆதார் முயற்சியை ஒரு அரசியல் நிகழ்வாகவே பாவித்து, அதிக குறை சொல்லியே வந்துள்ளது. முதலில் நாம் சொன்னபடி, இம்முயற்சியைக் குழப்பமான இந்திய அரசியல் கண்ணாடியுடன் பார்த்ததன் விளைவு இது. ஆதார் ப்ராஜக்ட் பி.ஜே.பி. -யால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. 2009 -ல் யு.பி.ஏ, அரசாங்கம் உருவாக்கிய ப்ராஜக்ட். ஏராளமாக இந்திய மென்துறை தொழிலில் சம்பாதித்து, உயர்பதவியில் இருந்தவர்கள், நாட்டிற்காக நல்லது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு உருவாக்கிய ப்ராஜக்ட் ஆதார். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த நந்தன் நிலேகனி இந்த ப்ராஜக்டில் முதலில் சேர்ந்தார். இவருக்கு இருந்த மிகப் பெரிய சவால், ஐ.ஏ.எஸ். படித்தவர்கள் மட்டுமே இவருக்கு உதவ முடியும் என்ற அரசாங்கக் கட்டுப்பாடு. இவர் நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் எவருக்கு கணினி விஞ்ஞானத்தில் ஞானம் மற்றும் ஆர்வமுள்ளது என்பதை சிலர் உதவியுடன் கண்டறிந்துள்ளார். இவர்களை நேர்கானலுக்கு அழைத்து, இதில், மிகவும் ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்களைச் சேர்த்துக் கொண்டார். இது நடைமுறையில் மிகப் பெரிய சவால். இவரைத் தொடர்ந்து, பல அனுபவமுள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் இவருடன் இணைந்தனர். இவர்களில், பலர், சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை. இன்றும், UIDAI, NPCI, GSTN, CCA போன்ற அமைப்புகளில் பல இந்திய நிரலர்கள் சம்பளம் ஏதுமின்றி உழைத்து வருகின்றனர். (https://uidai.gov.in/about-uidai/contact-us/volunteers.html)

 

முதலில், ஆதாரைப் பற்றி முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜிக்கு புரியும்படி சொல்வது ஒரு பெரிய சவாலாக இருந்ததாம்.

ப்ளாட்ஃபார்ம் என்பது வெறும் கான்க்ரீட் அமைப்பு. அதனால் பெரிதாகப் பயன் ஏதுமில்லை. ஆனால், அதன் பக்கத்தில் தண்டவாளம் அமைந்தால், அதன் மதிப்பு அதிகரிக்கிறது. அந்த ப்ளாட்ஃபாரத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் வரத் தொடங்கினால், ப்ளாட்ஃபார்மின் மதிப்பு இன்னும் பெரிதாகிறது. ஆனால், வேலையை ப்ளாட்ஃபார்மிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்

இப்படிப் புரியவைத்து, இன்றும் கடினமாக உழைத்து வரும் ஆதார் நிரலர்கள் மற்றும் நிபுணர்களுக்கு, மிகப் பெரிய சவால், 2014 -ல் அரசாங்கம் பி.ஜே.பி. -க்கு மாறியதுதான். இந்த ப்ராஜக்டை அரசாங்கம் நிறுத்திவிடுமோ என்ற அச்சத்துடன் புதிய பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளனர். புதிய பிரதமரோ, பல புதிய எண்ணங்களுடன், இந்த ப்ராஜக்ட், அரசாங்க மானிய பிசகுகளை குறைக்க வழி வகுக்க வேண்டும் என்று சொல்லிதோடு நிற்காமல், மேலும், அரசு முதலீட்டை அதிகப் படுத்தினார்.

இன்று, ஆதார் ப்ராஜக்டால், அரசாங்கம் வருடத்திற்கு 1,000 கோடி ரூபாய்களை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மிச்சப்படுத்தியுள்ளது – சமையல் வாயு மானியத்தில் மட்டும். ஆதார் ப்ராஜக்ட்டின் முதலீடு 750 கோடி ரூபாய்.

மத்திய அரசாங்க அமைப்புகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது இந்தியாவில் வழக்கமான ஒன்று. ஆனால், ஆதார் விஷயத்தில், அவை போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வந்துள்ளன. உதாரணத்திற்கு, ஆர்.பி.ஐ. ஆதார் ப்ராஜக்டிடம், இந்திய வங்கியமைப்பை விரிவுபடுத்த ஆதார் உதவ வேண்டும் என்று சொன்னதோடு நிற்காமல், NPCI -க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியது. இதன் முக்கிய பலன், இன்று eKYC மூலம் 30 கோடி இந்தியர்கள் புதிதாக வங்கிக் கணக்கு திறந்துள்ளனர். உலகில் எங்கும் 30 கோடி வங்கிக் கணக்குகள் இவ்வளவு குறைந்த காலத்தில் நிகழ்ந்ததில்லை. SEBI என்ற பங்கு சந்தைச் சீரமைக்கும் அமைப்பு, eKYC -ஐ உடனே அமல்படுத்த முன்வந்தது.

இந்த ப்ராஜக்டில், அரசாங்கம் எல்லாவற்றையும் தானே செய்கிறேன் என்று 1950 வழிகளைப் பின்பற்றவில்லை. மாறாக, ஒரு நிதிப் புரட்சியின் முக்கிய வித்தை மட்டும் மண்ணில் தூவிவிட்டு. பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களை இந்த வித்தைச் சார்ந்த சேவைகளை உருவாக்க விட்டது. இது இந்திய சரித்திரத்தில் இதுவரை நடக்காத ஒன்று. அணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி விஷயங்களில், அரசாங்கம் வரிந்து கட்டிக் கொண்டு எல்லாவற்றையும் தானே செய்து வந்துள்ளது. ஒரு 8 ஆண்டுகளில், இந்த நிதிப் புரட்சி, ஒரு பெரிய இயக்கமாக மாறியதற்கு முக்கிய காரணம், அரசாங்கம் தன்னுடைய பங்கு மாற்றத்தின் வினையூக்கி (change catalyst) என்பதைப் புரிந்து கொண்டதுதான். முழு நேர, பகுதி நேர மற்றும் தன்னார்வலர்கள் – இதெல்லாம், இந்திய அரசாங்கம் செய்யுமா என்று நினைத்து கூடப் பார்ப்பது கடினம். ஆனால், இந்த ப்ராஜக்டில் இவை எல்லாம் அடக்கம். தலைமையும், குறிக்கோளும் சரியாக இருந்தால், மேற்குலகில் நடக்கும் அதிசயங்கள், இந்தியாவிலும் நடக்கும் என்பதற்கு உதாரணம் இந்த இந்திய அடுக்கு முயற்சி.

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
India stack இந்திய அடுக்கு
Open software initiative திறமூல மென்பொருள் இயக்கம்
Internet browsing data நுகர்வோர் இணையத் தரவு
Open source encryption algorithm திறமூல மென்பொருள் நெறிமுறை
Change catalyst மாற்றத்தின் வினையூக்கி

சொல்வனம் – மார்ச்  2018

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்

ஆதார் என்பது ஒரு அடையாள எண் என்று பார்த்தோம். இதனால், நேரடிப் பயன் ஏதும் இல்லை. இதைப் பயன்படுத்தும் மற்ற அடுக்குகளுக்கு ஆதார் மிகவும் பயனுள்ள விஷயம். ஆதாரின் ஆரம்பக் காலத்தில், அரசியல்வாதிகளுக்குப் புரியும்படி, இப்படி விளக்கப்பட்டதாம்!

“ரயில் ப்ளாட்ஃபாரம் என்பதில் என்ன இருக்கிறது? அது வெறும் கான்க்ரீட் அமைப்பு. அதன் பக்கத்தில் தண்டவாளங்களும், அதன் மேல் ரயில்களும் போகத் தொடங்கினால், ரயில் ப்ளாட்ஃபாரம் என்பது ஒரு மிகப் பெரிய மதிப்பைப் பெறுகிறது”.

காகிதத்திற்கு மை அழகல்ல

இந்த இந்திய அடுக்கை உருவாக்கியவர்கள் மிகத் தெளிவாகச் சிந்தித்திருந்தார்கள். இந்த டிஜிட்டல் அமைப்பு வெற்றி பெற, பல கோடி இந்தியர்களை வங்கி அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை மூன்று விஷயங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்துள்ளது:

1. வங்கி மூலம் அல்லாமல், காசு மூலம் வணிகப் பரிமாற்றம்
2. வர்த்தகத்தில் நம்பிக்கை இன்மை
3. தங்கத்தில் அநாவசிய முதலீடு

தங்க விஷயத்தை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம். ஆனால், மற்ற இரண்டு தடைகளுக்கும் வங்கிக் கணக்கு இல்லாமை மிகவும் முக்கிய காரணம். அத்துடன், வங்கிகள் படிவங்களாலேயே (forms) இந்தியர்களை பயமுறுத்தி வந்துள்ளனர். 2014 –ல் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்த அனுபவம் அலாதியானது. நான் இந்தியப் பிரஜையல்லாதது இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. என் வாழ்வில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய 100 கையெழுத்துக்கள் போட்டது இந்த விஷயத்தில் தான்!

சாதாரண இந்தியர்களை இந்த வங்கி அமைப்பிற்குள் கொண்டு வரக் காகிதமும் கையெழுத்தும் ஒரு தடையாக இருக்கக் கூடாது. காகிதமற்ற அடுக்கு இதை எளிதாக்குகிறது.

1. வங்கிகள் ஒரு App –ஐ செல்பேசியில் வாடிக்கையாளரை தறவிறக்கச் செய்கிறது
2. இந்த App –ஐ இயக்கினால், டிஜிட்டல் கையெழுத்து மற்றும் வாடிக்கையாளரின் அடையாளம் சரியானது என்று ஆதார் எண் மூலம், வங்கிக்கு சில நிமிடங்களில் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக, ஆதார் வழங்கி, பதிவு செய்யப்பட்ட App – களுக்கு மட்டுமே இந்தச் சேவையை வழங்கும். அத்துடன், சரியானது என்று மட்டுமே சொல்லும், மற்ற விவரங்கள் எதுவும் கைமாறாது
3. இதை eKYC (Electronic Know Your Customer) என்று சொல்லப்படுகிறது. இதில் காகிதமும் இல்லை, மையும் இல்லை
4. ஒரு வங்கிக் கணக்கு திறக்க 30-60 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சில நாட்கள் ஆகும் இந்த விஷயம் (மேற்குலகில் இன்றும் பல நாட்கள் ஆகும் விஷயம் இது). 30 கோடி புதிய வங்கிக் ஜன் தான் கணக்குகளை இம்முறையில் திறந்துள்ளது

டிஜிட்டல் பெட்டகம் இந்த அடுக்கில் அடங்கும். இது ஓரளவே பயனில் உள்ளது. இதைப் பற்றி அடுத்தப் பகுதிகளில் அலசுவோம். இப்போதைக்கு, நமது ப்ளாட்ஃபாரத்திற்கு தண்டவாளம் இந்தக் காகிதமற்ற அடுக்கு. ரயிலுக்கான அடுக்கு, காசற்ற அடுக்கு.

காசுதான் கடவுளா?

தலையணைக்குக் கீழே, ஏன் உங்களது பணப்பையில் கூடக் காசு பாதுகாப்பற்றது. இந்தியர்கள், இன்று ஊபரில், தெருவோரக் கடைகளில், ஆட்டோக்களில், எங்கும் PayTM போன்ற சேவைகளை பணத்திற்கு பதில் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

1. NCPI என்ற அரசு நிறுவனம், UPI என்ற மின்னணு கொடுக்கல்/வாங்கல் சேவையைத் தொடங்கியது. எப்படி இந்த UPI (Universal Payments Interface) –ஐ பயன்படுத்த வேண்டும் என்பதற்கு, பீம் என்ற App –ஐயும் வெளியிட்டார்கள். இன்றும், பீம் ஒரு முன்னோடியான App

2. UPI –யின் குறிக்கோள், இந்தியர்கள் செல்பேசிகளை மட்டுமே எடுத்துச் சென்று தங்களுக்குத் தேவையான சேவைகள்/ பொருட்களை வாங்க வழி வகுக்க வேண்டும். மேலும், இந்த வசதி, கிரெடிட் அட்டைகள் போல அல்லாமல், மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்பட வேண்டும்

3. சாதாரண இந்தியர்களுக்கு இந்த சேவை ஒரு வரப் பிரசாதம். அன்றாட செலவுகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தினால், எந்தக் கட்டணமும் இல்லை. You cannot compete with free!

4. அர்.பி.ஐ. நாளொன்றிற்கு, 20,000 ரூபாய் வரை UPI (வசதியைப் பயன்படுத்தும்) சேவையைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது

5. எப்படி இயங்குகிறது UPI ? இதன் முக்கிய அங்கம் ‘மெய்நிகர் கொடுக்கல் முகவரி’ (Virtual Payment Address). ஒரு நுகர்வோரின் வங்கிக் கணக்கு ஆதார் மூலம் eKYC செய்யப்பட்டால், வங்கிக் கணக்கு எண், வங்கியின் IFSC பின்னணியில் இணைக்கப்படுகிறது. இந்தச் சேவைகள் யாவும் வங்கி, NCPI மற்றும் ஆதார் வழங்கிகள் குறிமுறையாக்க முறைகளில் பத்திரமாக கைகுலுக்குகின்றன.

6. நுகர்வோர் இந்த செய்முறைக்குப் பின் தங்களுடைய மெய்நிகராக்க பணப்பையில் (virtual wallet) வங்கிக் கணக்கிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.

7. UPI மூலம் இயங்கும் ஒரு சேவையை நுகர்வோர் தங்களுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் சேவையுடன் தங்களுடைய ’மெய்நிகர் கொடுக்கல் முகவரி’ (Virtual Payment Address) –ஐ இணைத்துக் கொள்ள வேண்டும்.

8. ஊபராகட்டும், கடைகளாகட்டும், பேருந்து/ ரயில் டிக்கெட்டுக்கள் என்று எங்கு வேண்டுமானாலும், தன்னுடைய செல்பேசி மூலம், இந்தியர்கள் பணம் கட்டத் தொடங்கிவிட்டார்கள்

https://www.youtube.com/watch?v=FjwzGGEAJ5E

9. UPI மூலம், மற்ற மெய்நிகராக்க பணப்பைக்கு பணத்தைக் கட்டலாம். ஒரு வியாபாரம், இதே போல, இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்

10. இந்த UPI –ஐ கொண்டு, இந்தியர்களுக்கு பலப் புது கொடுக்கல்/ வாங்கல் முறைகள் ஒரு நிதி சூறாவளியையே ஏற்படுத்தியுள்ளது.

11. இன்னும் சில மாதங்களில், UPI கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவற்றின் கட்டணம், விசா/மாஸ்டர் போன்ற அமெரிக்க சேவைகளை முழி பிதுங்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விசா/மாஸ்டர் இந்தியாவை விட்டு வெளியேறினால் யாரும் கவலைப் படப் போவதில்லை.

12. சமீபத்தில் இந்தியாவிற்கு பயணித்த பொழுது, என்னுடைய கிரெடிட் அட்டை எதுவும் பயன்படுத்தவில்லை. இந்திய வங்கிகள், குறிப்பாகத் தனியார் வங்கிகள், மேற்குலக வங்கிகளை ரோமானிய காலத்து நிறுவனங்கள் போல காட்சியளிக்க வைத்துவிட்டன!

இன்று, UPI மூலம் இந்தியர்களுக்குக் கிடைக்கும் கொடுக்கல்/வாங்கல் சேவைகளின் பட்டியல்:

 

App
BHIM App
Chillr
FTcash
ICICI Pockets
Mobikwik
PhonePe
Trupay
Vodafone M-Pesa
Cent UPI
eMPower
HDFC PayZapp
Jugnoo Pay
KayPay
SBI Pay
Simply Pay
PayTM

இந்தப் பட்டியல் வளர்ந்து கொண்டே வருவதால், இது முழுப் பட்டியல் அல்ல. எல்லா வங்கிகளின் இவ்வகைச் சேவைகளையும் சேர்த்துப் பார்த்தால், விசா/மாஸ்டரின் நிலமைப் புரியும். இந்திய அடுக்கின் நிதிப் புரட்சியின் ரயில் இதுவே என்று தோன்றுகிறது. ஆனால், இது ஒரு ஆரம்பம் என்றே நினைக்கிறேன். UPI மூலம் , ஆரம்பத்தில் இந்தியாவில் மாதம் ஒன்றிற்கு 1,000 கோடி ரூபாய்கள் கைமாறின. இன்று (அக்டோபர் 2017), மாதம் ஒன்றிற்கு 7,000 கோடிகளாக வளர்ந்துள்ளது. 77 மில்லியன் பரிமாற்றங்கள் மாதம் ஒன்றிற்கு நிகழ்கின்றன.(http://www.livemint.com/Industry/0XWmnn35PzuA4V5xxhhVdM/UPI-transaction-volume-hits-768-million-in-October.html)77 மில்லியன் பரிமாற்றங்கள் ஒரு டிஜிட்டல் தடையத்துடன் நிகழ்ந்துள்ளன. இத்தனை பரிமாற்றங்களும் இதற்கு முன் (குறைந்த பட்சம் 60 மில்லியன்) காசாகவே கைமாறியது. இதனால், பல பயன்கள் நுகர்வோருக்குக் கிடைக்கும் என்று நம்ப வாய்ப்புள்ளது. இதற்கு, இந்திய வங்கித் துறை, தலைகீழாக மாற வேண்டும். மேற்குலக வங்கிகளைப் போல அல்லாமல், இந்திய வங்கிகள் மாறும் என்ற நம்பிக்கை நிச்சயம் உள்ளது.இந்திய அடுக்கில், நாம் அதிகம் அலசாத பகுதி ஒப்புதல் அடுக்கு. இதைப்பற்றி பிற்பகுதிகளில் அலசுவோம். அதற்கு முன், இந்த இந்திய அடுக்கின் பின்னணியில் நடந்த சுவையான விஷயங்களை அடுத்த பகுதியில் பார்போம்.தமிழ்ப் பரிந்துரைஎல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
India stack இந்திய அடுக்கு
India stack இந்திய அடுக்கு
Forms படிவங்களாலேயே
Virtual Payment Address மெய்நிகர் கொடுக்கல் முகவரி
Virtual wallet மெய்நிகராக்க பணப்பையில்

சொல்வனம் – ஃபெப்ரவரி  2018

இந்திய டிஜிட்டல் புரட்சி

I think Visa, MasterCard and Discover will not be around five years from now in India because we are moving payments to marginal cost
மனிஷ் சபர்வால்அர்.பி.ஐ. – டிசம்பர் 2017

ஒரு அமெரிக்கர் அல்லது கனேடியரை அவர்களது நாட்டில், அரசாங்கம் அவர்களது அடையாளத்தைக் காட்டச் சொன்னால், தன்னுடைய காரோட்டி உரிமத்தைக் (driver’s license) காட்டுவார்கள். இதில் அவர்களது புகைப்படம் இருக்கும். அத்துடன், சின்ன ப்ளாஸ்டிக் கார்டாக இருப்பதால், எங்கும் எடுத்துச் செல்ல தோதான விஷயம். இதையே ஒரு 12 வயது சிறுவனையோ அல்லது சிறுமியையோ காட்டச் சொன்னால் என்ன செய்வார்கள்? குறைந்த பட்சம் 16 வயதானாலே காரோட்டி உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேற்கத்திய இந்த முறை இடிக்கிறது அல்லவா? ஏன்? காரோட்டுதல் என்பது ஒரு குடிமகனுக்கு அளிக்கப்படும் ஒரு உரிமை. 18 வயதானால், ஓட்டுப் போட அனுமதிப்பதைப் போன்றது. இது அடையாளமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் இந்த நாடுகளில் காரோட்டாமலே இருந்து விடலாம். கனடாவில் அரசாங்க உடல்நல கார்டு உள்ளதால், இந்தக் கார்டை ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். அமெரிக்காவில் அதுவும் கிடையாது. பல நூறு தனியார் காப்பீடு நிறுவனங்கள் அட்டைகளை தனக்குத் தோன்றியபடி அடித்துத் தள்ளுகிறார்கள்.

  1. கனடாவின் உடல்நல அட்டையாகட்டும், அல்லது காரோட்ட உரிமமானாலும் (அமெரிக்கா/கனடா) சரி, இரண்டுமே மாநில அரசுகளால் அளிக்கப்படுபவை. இவை தேசிய அடையாளங்கள் அல்ல.
  2. கனடாவில் SIN மற்றும் அமெரிக்காவில் SSN என்பதே மத்திய அரசாங்கம் அளிக்கும் அடையாளம். ஆனால், இதில் புகைப்படம் கிடையாது.
  3. இலை மறைவாய், காய் மறைவாய் சில அரசாங்க, வங்கி மற்றும் கடன்/வரி விஷயங்களுக்காக இந்த அடையாளத்தைப் பகிர வேண்டி வரும். அமெரிக்காவில் SSN என்பது சீரியஸான விஷயமே அல்ல. எல்லா வணிகர்களும் சர்வ சாதாரணமாய்க் கேட்பார்கள்.
  4. காகிதத்தை மையமாகக் கொண்ட அரசாங்கங்கள் செய்த ஒரு முயற்சி, SSN மற்றும் SIN. இன்றைய மின்னணு உலகில் இதில் உள்ள குறைகள் மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கிறது.
  5. இந்திய அரசாங்கம், UIDAI என்ற அமைப்பைத் தொடங்கி, மேற்குலகின் கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் குறைபாடுகளை அறவே நீக்கி உருவாக்கிய முயற்சிதான் ஆதார்.

இந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி:

  1. ஆதார் எண் என்பது வெறும் ஒரு எண் – இதை வைத்துக் கொண்டு யாரும் எதையும் செய்ய முடியாது.
  2. கருவிழி வருடல் என்பது, ஆதாரின் உதவியினால், இன்று சாதாரண செல்பேசிகளில் சாத்தியம்.
  3. கருவிழி வருடல் (iris scan) மற்றும் ஆதார் எண் என்ற இரண்டும் UIDAI -க்கு அனுப்பப்பட்டால், 5 நொடிக்குள், இன்னார் ஒரு மெய்யான இந்தியப் பிரஜை என்று இந்தச் சேவை சொல்லிவிடும்.
  4. இதற்கான செலவு, அரசாங்கத்திற்கு .1 பைசா – அதாவது 1,000 கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசாங்கத்திற்கு ஆகும் செலவு 1 ரூபாய். இதைவிடக் குறைந்த செலவில் இத்தனை நவீன சேவை என்பது எங்குமே இயலாத காரியம்!
  5. இந்தக் கோரிக்கையை முன் வைக்கும் நிறுவனத்திற்கு, UDAI என்ன பதிலளிக்கிறது? இன்னார் ஒரு மெய்யான இந்தியப் பிரஜை அல்லது இந்த விவரத்துடன் ஆதார் தரவுதளத்தில் ஒரு பதிவும் இல்லை. அவ்வளவுதான். வாட்ஸாப்பில் வரும் வதந்தியைப் போல, அரசாங்கம், உங்களின் ஜாதகத்தை அம்பானியிடம் தராது!

சரி, இதனால் என்ன பயன்? ஏன் இதற்கு இப்படியொரு பில்ட் அப்?

முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அமைப்பு வெற்றி பெற மிக முக்கியமான தேவை, காமிராவுடன் வரும் ஒரு செல்பேசி. இந்தியாவில் இன்று 1,183 (1,183,040,925 – Sep 2017) மில்லியன் (2017) செல்பேசிகள் உள்ளன. கிராமங்கள், சிறு நகரங்கள், பெறு நகரங்கள் என்று எங்கும் இந்தியர்கள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதால், இந்தத் தொழில்நுட்பப் புரட்சிக்குத் தேவையான நுகர்வோர் எந்திரம் வெறும் செல்பேசிதான். செல்பேசி இல்லாதோர் பெரும்பாலும் குழந்தைகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆதார் மூலம் நடக்கும் இந்திய அடுக்கு தொழில்நுட்பம் காகிதத்தை எதிர்த்து உருவாகியுள்ள ஒரு மின்னணு புரட்சி.

இந்திய அடுக்கு என்று பலமுறை சொல்லியுள்ளேன். இந்த இந்திய அடுக்கு என்றால் என்ன?

  1. நான்கு மென்பொருள் அடுக்குகள் கொண்ட அமைப்பு ‘இந்திய அடுக்கு’. இதில் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதார் என்னும் அடுக்கு – இதை presenceless layer என்று அழைக்கப்படுகிறது – தமிழில் ’முன்னிலையற்ற அடுக்கு’ என்று சொல்லலாம். மற்ற அடுக்குகள் அனைத்தும் இந்த அடிப்படை அடுக்கை அடையாளத்திற்காகப் பயன்படுத்தும்.
  2. அடுத்தபடியாக வருவது காகிதமற்ற அடுக்கு – paperless layer. இது மிகவும் முக்கிய பயன்களை உருவாக்கும் அடுக்கு. அதாவது, ஒருவரின் டிஜிட்டல் அடையாளம் வெகு எளிதாக ஒரு நிதி நிறுவனத்திடம் பரிமாற்றிக் கொள்ள உதவும் அடுக்கு. உதாரணத்திற்கு ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு வங்கி உங்களைக் கவரும் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களது டிஜிட்டல் அடையாளத்தை புதிய வங்கியிடம் மிக எளிதில் மாற்றிக் கொண்டு, நீங்கள் அவர்களின் புதிய சேவையைப் பயன்படுத்தலாம். இதில் காகிதமே தேவையில்லை. இதைப் பற்றி விரிவாகப் பிறகு அலசுவோம்.
  3. அடுத்தபடி, காசற்ற அடுக்கு – cashless layer. இங்குதான் ஒரு நிதித் தொழில்நுட்பப் புரட்சியே நிகழ வாய்ப்புள்ளது. பல தரப்பட்ட செலவுகளுக்கு நீங்கள் உங்களது டிஜிட்டல் பணப்பையை (digital wallet) பயன்படுத்திப் பல சேவைகளையும் பெறலாம். நுகர்வோர் மற்றும் வணிகத்திற்கு மிகக் குறைந்த செலவில் இந்த அடுக்கு நிதிப் பரிவர்த்தனை (financial transactions) செய்ய உதவும். இன்று PayTM போன்ற சேவைகள் இந்த அடுக்கில் இயங்குகின்றன. இதைப் பற்றியும் விரிவாக அலசுவோம்.
  4. எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்புதல் அடுக்கு – consent layer. இந்த அடுக்கு இன்னும் முழுவதும் உருவாக்கப்படவில்லை. இதன் குறிக்கோள் – எந்த ஒரு ஆதார் சொந்தக்காரரும், தன்னுடைய விவரங்கள் எந்த அளவு, எப்படி, யாருடன், எத்தனை நாட்கள் பகிர்ந்து சொள்வது என்பதை முடிவெடுக்க முடியும். இதனால், பலவகை சேவைகள் – நிதி சேவைகளுக்கு அப்பால், கல்வி, உடல்நலம், அரசாங்க சலுகைகள், போன்ற பல பரிவர்த்தனைகள் எளிமையாக்கப்படும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால்:

  1. ’முன்னிலையற்ற அடுக்கு’, அதாவது presenceless layer, தேவைக்கேற்ப ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்த உதவும் – authentication on demand
  2. காகிதமற்ற அடுக்கு – அதாவது paperless layer, தேவைக்கேற்ப ஒருவரின் ஆவணங்களை வெளிப்படுத்த உதவும் – documents on demand
  3. காசற்ற அடுக்கு – அதாவது cashless layer, தேவைக்கேற்ப ஒருவரின் நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய உதவும் – financial transactions on demand
  4. ஒப்புதல் அடுக்கு – அதாவது consent layer, தேவைக்கேற்ப ஒருவரின் அனுமதி பெற உதவும் – permission on demand

கடந்த 8 ஆண்டுகளில் (2017), இந்த இந்திய டிஜிட்டல் முயற்சி ஒரு அரசாங்க ப்ராஜக்ட் என்பதையே நம்பவே கடினமாக உள்ளது. 3 கி.மீ. பாதாள ரயில் நீட்டிப்பிற்கு மேற்குலகில் 5 வருடம் ஆகிறது; 4 கி,மீ. நகர மைய நெடுஞ்சாலை நீட்டிப்பு 5 வருடமாகிறது!

  1. 2009 –ல் ஆதார் ப்ராஜக்ட்டுக்காக UIDAI என்ற அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டது
  2. 2010 –ல் UIDAI (Universal Identification Authority of India) எப்படி ஆதார் அடையாளங்களைக் கோர வேண்டும் என்ற வரைமுறையை (Aadhar Auth API) வெளியிட்டது. முதல் ஆதார் நம்பர் இன்னும் எவருக்கும் அளிக்கப்படவில்லை!
  3. 2011 –ல் NPCI (National Payments Corporation of India) என்ற அரசு நிறுவனம், மத்திய அரசாங்க சலுகைகளைப் பெற, ஆதாரை மையமாகக் கொண்ட ஒரு பணம் செலுத்தும் சேவையைத் தொடங்கியது. கிரேடிட் கார்டற்ற முதல் இந்திய பணம் செலுத்தும் முறை உருவானது
  4. 2012 –ல் UIDAI, மின்னணு நுகர்வோர் அறிதல் (eKYC – Electronic Know Your Customer) சேவையை அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆதார் எண்ணும், கருவிழி ஸ்கேன் மற்றும் செல்பேசியில் OTP இவை மட்டுமே தேவை. காகிதம் கிடையாது!
  5. 2015 –ல் CCA (Controller of Certifying Authorities) என்ற அரசாங்க அமைப்பு, டிஜிட்டல் சான்றிதழ் மற்றும் காப்புப் பெட்டகங்களை (digital certification and locker) அறிமுகப் படுத்தியது. மேற்குலகில் சில தனியார் நிறுவனங்கள் இந்தச் சேவையைப் புரிகின்றன. பெரும்பாலும் இவை டிஜிட்டல் சான்றிதழ் அமைப்புகள். இவ்வகை டிஜிட்டல் சான்றிதழ், பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்த உதவும் கருவிகள். டிஜிட்டல் காப்பகங்கள் மேற்குலகில் தனியார் நிறுவனங்கள் அதிக வெற்றியின்றி சில ஆண்டுகளாக அளித்து வருகின்றன. தனியார் நிறுவனம், காப்புப் பெட்டகங்களை தீய நோக்குடன் (வேறென்ன, எல்லாம் லாப நோக்குதான்) பயன்படுத்தி விடுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்
  6. 2016 –ல் NCPI, ஒருங்கிணைக்கப்பட்ட மின்னணு பணம் செலுத்தும் இடைமுகப்பை (Unified electronic payments Interface) அறிமுகப்படுத்தியது. உலகின் மிக நவீனமான மின்னணு பணம் செலுத்தும் இடைமுகப்பை இதுவே ஆகும்.

இந்த டிஜிட்டல் புரட்சிக்கு முக்கிய தேவைகள் மூன்று:

  1. ஒரு வங்கிக் கணக்கு
  2. ஆதார் பதிவு
  3. செல்பேசி – காமிராவுடன்

இதைவிட எளிமையான தேவைகள் உள்ள ஒரு நிதியமைப்பு உலகில் எங்கும் இல்லை. ஆனால், இந்தியாவில் பல கோடி மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தார்கள் (இன்னும் இருக்கிறார்கள்). இதை JAM என்கிறார்கள் – அதாவது, Jan Dhaan Account, Aadhar and Mobile.

இந்திய அரசாங்கத்தின் நோக்கம் எல்லா குடிமக்களுக்கும் இந்தச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே. பொதுவாக, இந்தியாவில், சந்தையை விரிவாக்குவது என்பது தனியார் நிறுவனத்திடம் அரசாங்கம் விட்டுவிடும். நலிவுற்றோர் நலனுக்காக, அரசாங்கம், தானே முன்வந்து பல திட்டங்களையும், மானியங்களையும் செய்யும். இப்படிச் செயல்பட்டதில், இந்தியா பெரிதாக பயனடையவில்லை. இந்தத் தொழில்நுட்பம், இந்த இரண்டு விஷயங்களையும் ஒரே திட்டத்தில் நிறைவேற்ற முயற்சி செய்துள்ளது. இந்திய அடுக்கு, மற்றும் ஜந்தான் வங்கிக் கணக்கு ஒரு 60 கோடி இந்தியரை இன்னும் சில ஆண்டுகளில் அமைப்புடைய பொருளாதாரத்திற்குள் (organized economy) கொண்டு வரும். மேலும், மற்ற இந்திய அடுக்குகள், மிக மலிவாக நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய உதவும். எல்லாம் தடையின்றி நடந்தால், உலகின் மிகப் பெரிய பொருளாதாரப் புரட்சியாக மலர இந்திய அடுக்கு வழி வகுக்கும்:

இன்று அரசாங்கம், இந்த அடிப்படை மூன்று விஷயங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

அடுத்த பகுதியில், இந்த அடுக்களின் பயன் மற்றும் தொழில்நுட்பத்தை விரிவாக அலசுவோம்.
தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்.

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
India stack இந்திய  அடுக்கு
Driver’s license காரோட்டி உரிமம்
Presenceless layer முன்னிலையற்ற அடுக்கு
Paperless layer காகிதமற்ற அடுக்கு
Cashless layer காசற்ற அடுக்கு
Consent layer ஒப்புதல் அடுக்கு
Digital wallet டிஜிட்டல் பணப்பை
Financial transactions நிதிப் பரிவர்த்தனை
Authentication on demand தேவைக்கேற்ப அடையாளம்
Documents on demand தேவைக்கேற்ப  ஆவணங்கள்
Financial transactions on demand தேவைக்கேற்ப நிதிப் பரிவர்த்தனைகள்
Permission on demand தேவைக்கேற்ப அனுமதி
eKYC – Electronic Know Your Customer மின்னணு நுகர்வோர் அறிதல்
Organized economy அமைப்புடைய பொருளாதாரம்

சொல்வனம் – ஃபெப்ரவரி  2018

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு.

  • “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஃப்ரீமாண்ட் என்கிற ஊர்ல இருக்கறதாகக் கேள்வி”
  • “அமெரிக்காவில கன்ஸாஸ் கிட்ட ஓர் ஊர்ல பெரிய வேலைல இருக்கான். டிசிஎஸ் அவனை அமெரிக்கா அனுப்பினாங்க. கூடிய சீக்கிரம் சுந்தர் பிச்சை போல வந்துறுவான்”
  • “உங்களுக்கு இந்த செல்ஃபோன் விஷயமெல்லாம் அத்துப்படிதானே? இந்தத் திருகு வேலையெல்லாம் இளசுகளுக்குத் தான் புரிகிறது”
  • “இங்க கரண்ட்டும் இல்ல, தண்ணியும் இல்லை. உங்க ஊர்ல அதுக்கெல்லாம் பஞ்சமே இல்லையாமே. இங்கெல்லாம் திரும்பி வந்துறாதே”.
  • “அப்பப்பா, இங்க பொல்யூஷன் தாங்க முடியல. கார் இருக்கிறவன் பாடு தேவலை. இந்த டீசல் புகையில புதுசு புதுசா வியாதிகளெல்லாம் வருதப்பா”
  • “அட OTP தெரியல? இதெல்லாம் உங்க ஊரிலிருந்து வந்துச்சுன்னு நெனச்சிருந்தேன்”
  • “உங்க ஊரப் போல இந்தியாவிலும் ஏடிஎம் வந்துருச்சு. கார்ட தேச்சா எங்க வேணும்னாலும் பணம் எடுத்துக்கலாம்”
  • “புதுசா எதுக்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு குடுத்துற்றாங்க. செளகரியமாக இருந்தாலும், பணம் கட்டலன்னா ஆள வச்சு பயமுறுத்தறாங்க”
  • ”எல்லாத்தையும் இணைச்சுறுவேன்னு அரசியல்வாதிங்க சொல்லிக்கிட்டு திரியறான். முதல்ல பான் கார்டு, அப்புறம் ஆதார் கார்டு வந்துச்சு. எல்லாத்தையும் இணைகிறேன்னு அரசாங்கம் ஒத்தக் கால்ல நிக்குது. காவிரியையும் கங்கையும் இணைக்கக் காணோம்”
  • “உங்க ஊர் தேவல. இங்க இருக்கற கூட்டத்துக்கு, எல்லாத்தையும் இணைக்கிறதுக்குள்ள கிழிஞ்சுறும். இங்க பாரு, எத்தனை கார்டு”
  • ”முன்ன மாதிரி ஆட்டோக்காரனிடம் பேரம் பேச வேண்டாம். ஊபர், ஓலா வந்தப்புறம், எல்லாம் செல்ஃபோனில் அழைத்துச் சரியான வாடகை கொடுத்தால் போதும். உங்க ஊரைப் போல மெதுவாக இந்தியாவில எல்லாம் வந்துக்கிட்டு இருக்கு. என்ன, இங்க ஊழல் அதிகம். அது சரியானா, இந்தியாவைப் பிடிக்க முடியாது”
  • “ISRO என்னவெல்லாம் செய்யுது! இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிட்டோம். அட, இங்க வந்து வேலைப் பாருங்க. இந்தியாவில் என்ன இல்லை?”
  • “ஜியோ என்று ஒரு புயலான ஒரு செல்பேசி சேவை வந்திருக்கு. ஏராளமான விஷயங்கள் இலவசம். மாறாக உங்க ஜாதகத்தை அம்பானியிடம் கொடுத்துறணும். நம்மகிட்ட கருப்புப்பணமா இருக்கு, கவலப்பட…”
  • “இந்த வருஷம் புயலால அதிகம் சேதமில்லை. சரியாக எல்லோரையும் அப்புறப்படுத்திட்டாங்க”

இந்தக் கருத்துக்கள் மிகவும் நியாயமான சாதாரண மனிதர்களின் கருத்துக்கள். முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இந்தியாவின் முன்னேற்றங்களைக் குழப்பமான ஊழல் அரசியல் செய்திக் கண்ணாடி அணிந்து பார்த்தால், இப்படிப்பட்ட கருத்துக்கள் சொல்லப்படுவது புரிந்து கொள்ள முடியும்.

  • அடிப்படைக் கல்வி, போக்குவரத்து, சட்டம், சுகாதாரம், நகராட்சி  வசதிகளில் பின்தங்கி, தொழில்நுட்பத்தில் வளர்வது, இந்தியா போன்ற ஒரு முரணான தேசத்தில் மட்டுமே சாத்தியம்
  • பல்லாண்டுகள் மக்கள் தீர்வுக்காக ஏங்கும் பிரச்சினைகளை (தண்ணீர், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, குடியிருப்பு) ஒதுக்கிவிட்டு, புதிய விஷயங்களுக்குத் தீர்வு காணும் தேசம் இந்தியா
  • தன்னுடைய பிரச்சினைகளுக்கு, சல்லிசாக வளர்ந்த நாடுகள் எப்படியோ தீர்வு கண்டுவிடும் என்ற பழைய நோக்கு
  • தூரத்துப் பச்சை – மேலை நாடுகள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டதாக நம்பும் பாமரத்தனம்

இந்தியாவின் கடந்த முப்பது ஆண்டுகளில் உலகை நிமிர்ந்து பார்க்க வைத்த விஷயங்கள் பலவற்றை இந்தியா செய்துள்ளது.

  1. 1991 –ல் உலக தாராளமாக்கம் (liberalization). பல புதிய முயற்சிகளுக்கு இது வழி வகுத்ததால், இங்குச் சொல்லியாக வேண்டியுள்ளது. வேறு வழியில்லாமல் செய்யப்பட்ட ஒரு விஷயம் இது என்பது இன்று நாம் அறிவோம்.
  2. 1995 –ல் இந்தியாவில் முதன் முதலாக இணையம் (internet) மற்றும் செல்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கே இணையம் 1991 –ல் அறிமுகமானது
  3. 1998 –ல் தரையடியே அணுகுண்டு சோதனை. இதில் அணுக்கரு சேர்ப்பு மற்றும் அணுக்கரு பிளவு இரண்டும் அடங்கும்.
  4. 1999 –ல் ATM எந்திரங்கள் இந்தியாவில் பெருவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டது
  5. 2000 –ல் காப்பீடு தனியார் மயமாக்கப்பட்டது
  6. 2001 முதல் இந்திய விண்வெளிக் கழகம் மற்ற நாடுகளின் துணைக்கோள்களை விண்ணில் ஏவத் தொடங்கியது
  7. 2005 –ல் இந்தியா உலகின் முதல் பத்து பொருளாதார நாடுகளில் ஒன்றானது. இந்த ஆண்டில் தொலைத் தொடர்பு கட்டணங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டது
  8. 2009 –ல் சந்திரயான் செயற்கைக் கோள் சந்திரனைச் சுற்றி வந்தது
  9. 2014 –ல் மங்கல்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்தது. இந்த இரு நிகழ்விற்கு இடையில் இந்திய விண்வெளிக் கழகம் பல செயற்கைக் கோள்களை விண்ணில் மிதக்க விட்டது. உலகின் விண்வெளி தேசங்களில் முக்கிய ஒன்றாக இந்தியா மாறியது. 2016 –ல் 96 செயற்கைக் கோள்களை ஒரு ராக்கெட் மூலம் விண்ணில் மிதக்க விட்டது
  10. 2016 –ல் இந்தியா, பழைய 500 முதல் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது (demonitisation)
  11. 2017 –ல் பொது விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது (GST)

இதைத் தவிர இன்னும் பல விஷயங்கள் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து வந்துள்ளது. முக்கியமாகச் செல்பேசிகள் இந்தியாவில் சைனாவிற்கு அடுத்தபடியாக அதிகமாக விற்கிறது. மூன்று மாதத்திற்கு 25 மில்லியன் புதிய இணைப்புகள் (2000 –ல் கனடாவின் மக்கட்தொகை!) என்ற கணக்கில் இன்னும் வளர்ந்து வந்துள்ளது.

இன்று 15 இணைய நுழைவாயில்களுடன் உலகின் எந்த நாட்டுடனும் போட்டியிடும் அளவிற்கு இணைய இணைப்புகள் வளர்ந்துள்ளன.

இது என்ன இந்திய நியூஸ் ரீல் போல உள்ளது என்று தோன்றலாம். ஆனால் ஏதோ ஒன்று இடிக்கிறது. 1,200 மில்லியன் மக்கள் நிறைந்த தேசத்தின் சாதனைகள் இவ்வளவுதானா?

  1. நாம் பட்டியலிட்ட எதுவுமே இந்தியா உலக நாடுகளில் முதன் முறையாகச் செய்யவில்லை
  2. தனியார் துறையில் பணிபுரியும் இந்திய நிரலர்கள் உலகால், சல்லிசான நிரலர்கள் என்றே மதிக்கப்படுகின்றனர்
  3. இந்திய அரசாங்க முயற்சிகளான விண்வெளி மற்றும் அணு ஆராய்ச்சித் துறைகள் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் அளவிற்கு உயர்த்தியதே தவிர, உலகின் முதன் முறையாக விஞ்ஞானத்தில் சாதிக்கும் ஒரு நாடாக மாற்ற முடியவில்லை
  4. இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கம் ஒன்றுதான் இந்தியாவை அளவிட உலக நாடுகள் ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துகின்றன
  5. இந்தியாவின் இளைஞர் சக்தி என்ற ஒரே ஒரு விஷயம்தான் இந்தியாவின் நல்முகமாக உலகிற்குத் தெரிந்தது

ஒரு புறம் இப்படியிருக்க, இன்னொரு புறம், சில இந்திய பொருளாதார விஷயங்கள் தானாகவே நிகழ்பவை. சில உதாரணங்கள்:

  1. எந்த ஒரு சேவையும் மிகவும் மலிவான விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
  2. எந்த ஒரு முயற்சியும் தண்ணீரை விரயப்படுத்தக் கூடாது
  3. எந்த ஒரு எந்திரமும் பெட்ரோலை அதிகம் பயன்படுத்தக்கூடாது (இந்த ஒரு விஷயத்தில் இந்தியா சறுக்கியுள்ளது, இந்திய சாலைகளைப் பார்த்தாலே தெரியும்)
  4. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது
  5. எந்த ஒரு முயற்சியும் காகிதத்தை வீணாக்கக் கூடாது

இந்த ஐந்து கொள்கைகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெரிய நாடு இந்தியா. 1,200 மில்லியன் இந்தியர்களுக்கு வசிக்க/பணிபுரிய இடம், தண்ணீர் மற்றும் வளங்கள்  மிகவும் அரிதானது.

முதலில் காகித விஷயத்திற்கு வருவோம். வட அமெரிக்கா காகிதத்தை வீணாக்குவதைப் போல, உலகில் எங்கும் இல்லை. காகித விரயம், மரங்களைக் கொல்லுவதற்கு ஈடானது என்பதை எல்லோரும் அறிவோம். இந்த அடிப்படைக் கொள்கையின்படி இந்தியா செய்த முயற்சிகள் இந்தியாவை என்றும் தலை நிமிர வைத்துள்ளது.

1980 -களிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இந்திய தேர்தல்களில் ஏறக்குறைய 600 முதல் 800 மில்லியன் வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்கிறார்கள். உலகின் மற்ற ஜனநாயக நாடுகளைப் போல, காகித அடிப்படையில் வாக்குகள் இந்தியாவில் ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டன. 1980 -களின் கடைசியில், இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை மின்கலன்களில் செயல்படும் மிகவும் பாதுகாப்பான எந்திரம். பல நீதிமன்றங்கள் இந்திய எந்திரங்களை உலகின் மிக நவீன எந்திரம் என்று தீர்ப்பு அளித்துள்ளன. உலகில் இதைப் போன்று, யானையின் மேல், கொட்டும் மழையில், கொதிக்கும் வெயிலில், பொழியும் பனியில் சோதிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் எங்கும் இல்லை.

இதை ஏனோ இந்தியர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதே இல்லை. இன்றும், ஜனநாயகத்தின் பாதுகாப்பாளன் என்று மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில், பல இடங்களில் காகித வாக்களிப்பு தான். கனடா, ஆஸ்த்ரேலியா, யூரோப், எல்லாம் இதே கதிதான். ”அதெப்படி இந்திய வாக்களிப்பு எந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவது? நமது ஜனநாயகத்தை இந்திய நிரலர்களிடம் விட்டு விடுவதைப் போல உள்ளதே!” – இப்படி வறட்டு கெளரவம் தடுத்தாலும், இந்தியாவின் இந்தச் சாதனையை யாரும் செய்யவில்லை.     

2009 -ல் இந்திய அரசாங்கம் ஒரு முக்கியமான முயற்சியில் இறங்கியது.

  1. ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த அடையாளம் உருவாக்க வேண்டும். இந்த அடையாளம் கருவிழி வருடல் (iris scan) மூலமாகச் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தது. அந்நாளில், இவ்வகை வருடிகள் பல்லாயிரம் ரூபாய்களுக்கு விற்ற காலம் அது. இதுவே ஆதார் என்ற ஒரு அடையாள மையம். இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு ஆதார் ஒரு ஆணிவேர்
  2. ஒவ்வொரு இந்தியனின் நிதி விஷயங்கள் மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களை ஆதார் கொண்டு மிக எளிமையாக மற்றும் மலிவாகவும் கொண்டு சேர்க்க வேண்டும்
  3. தனியார் துறைதான் இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆதாரம் என்ற பொதுக் கருத்தை அரசாங்கம் உடைத்தது. நாம் பார்த்த உதாரணங்களில் யாராவது “மிகப் பெரிய அரசாங்க தகவல் தொழில்நுட்ப வேலை பார்க்கிறாள்” என்று பெருமைப்பட்ட்தாகச் சொல்லவில்லை
  4. டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ் நினைத்துப் பார்க்க முடியாத விஷயத்தை, இந்திய அரசாங்கம் ஆதார் ப்ராஜக்ட் மூலம் நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இன்று உலகில் வெறும் 5 முதல் 6 நிறுவனங்கள் நாளொன்றிற்கு 1 பில்லியன் பரிமாற்றங்கள் நிகழ்த்துகின்றன. இந்த நிறுவனங்கள் இந்த நிலையை அடைய 10 ஆண்டுகள் பிடித்தன. ஆதார் இந்த நிலையை 5.5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே சாதித்துக் காட்டியுள்ளது. மற்ற இணைய தளங்கள் யாவும் அமெரிக்காவில் உள்ளன
  5. இந்திய அரசாங்கம் மேற்குலகின் பலவகை குறைகளையும் இந்த முயற்சி மூலம் சரிசெய்து வெற்றியும் பெற்றுள்ளது
  6. அடிப்படை விஷயத்தை அரசாங்கம் தன்னிடம் வைத்துக் கொண்டு, வங்கிகள் மற்றும் பிற சேவைகளுக்குப் பல வகை மலிவான சேவைகளை உருவாக்க வழி செய்துள்ளது

வழக்கம் போல, மேற்குலகம், உடனே நம்பத் தயாரில்லை. ஊழல் மிகுந்த இந்தியாவில் இது ஒரு ஸ்டண்ட் என்று நினைக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். எந்த ஒரு வளர்ந்த நாட்டிலும் இவ்வளவு மலிவான ஆனால் நம்பகமான ஒரு அடையாளம் மற்றும் நிதிப் புரட்சி நிகழவில்லை.  இதைத் தனியார் (இந்திய/பன்னாட்டு) நிறுவனங்களிடம் விட்டிருந்தால், தீட்டியிருப்பார்கள். இந்திய அரசாங்கம் உலகில் முதன் முறையாக, நேர்த்தியாக ஒரு பல்லடுக்கு நிதிப்புரட்சி உருவாகும் சூழலை உருவாக்கியுள்ளது. இதில் வங்கிகள் (banks) , பங்கு சந்தை (stock market) , காப்பீடு (insurance) , வருமான வரி (income tax) , விற்பனை வரி (sales tax) , அன்றாட நிதி பரிவர்த்தனைகள் (daily financial transactions) என்று எல்லாம் அடங்கும்.

இக்கட்டுரைத் தொடரில், இந்த ‘இந்திய அடுக்கைப்’ பற்றி விரிவாக மற்ற பகுதிகளில் பார்ப்போம். அதற்கு முன், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், தன்னுடைய அரசாங்கத்தைத் திட்டும் முன்பு, கொஞ்சம் இதைப் பற்றிப் பெருமையும் பட்டுக் கொள்ளலாம்.

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

 

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Liberalization தாராளமாக்கம்
Internet இணையம்
General Sales Tax பொது விற்பனை வரி
Iris scan கருவிழி வருடல்
Banks வங்கிகள்
Stock market பங்கு சந்தை
Insurance காப்பீடு
Income tax வருமான வரி
Sales tax விற்பனை வரி
Daily financial transactions அன்றாட நிதி பரிவர்த்தனைகள்

சொல்வனம் – டிசம்பர் 2017

 

தானோட்டிக்கார்கள் – முடிவுரை – பகுதி 15

சிலவருடங்கள் முன் இந்தியா வந்த பொழுது, 10 வயது சிறுவனோடு ஒரு வினோத அனுபவம். என்னை எப்படியோ ஐஸ் வைத்து  (அவனுக்கு நான் கனடாவிலிருந்து வந்துள்ளேன் என்று தெரியும்!) என்னுடைய திறன்பேசியைக் கைப்பற்றி, என்னுடைய அனுமதியுடன், Temple Run விளையாடத் தொடங்கினான்.

அரை மணி நேரத்தில், நான் வருடக்கணக்கில் தொடாத ஸ்கோரைத் தொட்டுவிட்டான். அவனது துரதிஷ்டம் – அவனது அம்மாவிற்கு அவன் விளையாடுவது தெரிந்துவிட்டது.

அடுத்தபடி அவன் அம்மாவிற்கும், அவனுக்கும் நடந்த உரையாடல்கள் மிகவும் சுவாரசியமானவை. அவனுடைய அன்றைய காலை மின்னணு விளையாட்டு நேரம் முடிந்துவிட்டது என்று அம்மா அறிவித்தாள். அவன் கையில் கொண்டு வந்த வீட்டுப்பாடத்தை அடுத்த 2 மணி நேரத்திற்குள் முடித்து, அவளிடம் காட்டி வெற்றி பெற்றால், மீண்டும் என்னுடைய திறன்பேசியில் இன்னொரு 30 நிமிடங்கள் Temple Run விளையாடலாம். இந்த உடன்பாடு அருமையாக அன்று நிறைவேறியதை நான் பார்த்தேன்.

இந்த உதாரணத்தில் மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியமான எந்திரக் கற்றலியல் சார்ந்த விஷயங்கள்;

  • சிறுவன், கையில் Temple Run கிடைத்தால், அவனுடைய குறிக்கோள், அதிக ஸ்கோர் எடுப்பது
  • அம்மா, தன்னுடைய பிள்ளை, மின்னணு விளையாட்டால், மிகவும் தாக்கும் நடத்தை (aggressive behavior) வரக்கூடாது என்று கராராக இருப்பது
  • சிறுவனுக்கு, பள்ளி வீட்டுப்பாடம் செய்யவேண்டும் என்ற அடிப்படைப் பொறுப்பு இருந்தாலும், Temple Run –ன், வசீகரம் மிகவும் பிடிக்கிறது

எந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த மென்பொருள் நெறிமுறைகளில் ஆராய்ச்சி செய்து வந்த Deep Mind என்ற நிறுவனத்தை, கூகிள் 2014–ல் வாங்கியது.

இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது.

விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா? அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா? இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.

இந்தக் காரில் பயணம் செய்வோருக்கு சத்தியமாக வயிற்றைக் கலக்கும். மிகக் குறைந்த இடைவெளியில் ஒரு வரைபாதையிலிருந்து, அடுத்த வரைபாதைக்கு மிகவும் அபாயகரமாய் மாற்றும் (சென்னையில் ஆட்டோ பயணம் மேற்கொண்டவர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்காது). மேலும், இதன் தாக்கும் நடத்தை மற்ற கார் ஓட்டுனர்களையும் கதிகலங்கச் செய்யும். தமிழ் சினிமாவில் அம்மா செண்டிமெண்ட் போல, இஸ்ரேல்காரர்களும், அம்மா கட்டுப்பாட்டை நெறிமுறைக்குள் கொண்டு வந்து சோதித்துப் பார்த்தார்கள்.

கணினி மென்பொருளில் அம்மா கட்டுப்பாடா/ அது எப்படி? அதிக ஸ்கோரை நோக்கியே பயணம் என்றிருந்தது போக, அபராதத்தையும் நெறிமுறைக்குள் கொண்டுவந்தார்கள். அதாவது, அபாயகரமாக வரைபாதையை மாற்ற முயற்சி செய்தால், அபராதம். ஒழுங்காக ஓட்டினால் ஸ்கோர் என்று இந்தக் கணினி மென்பொருள் நெறிமுறைய மாற்றி சோதித்தார்கள்.

சோதனையில் ஒரு மிக முக்கிய எந்திரக் கற்றலியல் விஷயம் தெரிய வந்தது. மனிதர்களைப் போல தானோட்டிக் கார் செயல்படத் தொடங்கியது.

  1. முதலில், திருப்புகுறிகையை (turn indicators) ஆன் செய்தது. பின்னே வரும் கார்களுக்கு தானோட்டிக் கார் தன்னுடைய வரைபாதைக்கு வரலாம் என்ற செய்தியை அறிவிக்கிறது
  2. முழுவதும் அடுத்த வரைபாதைக்குப் போகாமல், சற்று முயற்சித்தது
  3. பின்னே வரும் காரின் வேகத்தைக் கணக்கில் கொண்டு, கணினி நெறிமுறை, இந்த மாற்றம் அபாயகரமாக இருந்தால், அபராதத்தை அதிகரிக்கும்
  4. திருப்புக்குறிகையை அணைத்துவிட்டு, சமர்த்தாக மீண்டும் தன்னுடைய வரைபாதக்கே திரும்பிவிட்டது
  5. மீண்டும்படி 1 மற்றும்படி 4 –ஐ முயற்சித்தது. அபராதம்அதிகமானால், படி 4 –ஐ செய்து சமர்த்தாக தன்னுடைய வரைபாதைக்கே திரும்பிவிட்டது
  6. இவ்வாறு பலமுறைபடி 1 மற்றும்படி 4 –ஐ முயற்சித்தது, அபராதம் அதிகரிக்காத, ஆனால் ஸ்கோர் உயரும் தருணத்தில், அடுத்த வரைபாதைக்கு கார் மாறிவிட்டது

என்ன நடக்கிறது இங்கே? நம்முடைய தானோட்டிக்காருக்கு, மற்ற வாகனங்களுடன்க லந்துரையாடி முடிவெடுக்கும் திறமை வந்து விட்டது – அதாவது self-driving car now negotiates!

இந்திய கார் ஓட்டுனர்கள் (சில ஆசிய/ ஆப்பிரிக்க நாடுகளிலும் இதே கதிதான்) போக்குவர்த்து சிக்னல்களைத் தவிர்த்து, பெரிதாக சாலை விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. பொதுவாக இது போன்ற நாடுகளில்;

  1. வரைபாதைகள் பாதிசாலைகளில் இருப்பதே இல்லை
  2. வரைபாதைகள் இருந்தாலும், வாகனங்கள் கலந்துரையாடி அடுக்கடுக்காய் எப்படியோ பயணிக்கின்றன
  3. எல்லா ஓட்டுனர்களும் தங்களுடைய காருக்கு பங்கம் வராமல் முடிந்தவரைப் பார்த்துக் கொள்கிறார்கள்

அதாவது, நம்முடைய சிறுவன் – அம்மா உதாரணத்தில், ஸ்கோர் இருந்தது, அபராதமும் இருந்தது. இந்திய ஓட்டுனர்களுக்கு அபராதம், தன்னுடைய வாகனச் சேதம். மற்ற எல்லாம் ஸ்கோர்தான்.

இந்தத் தொழில்நுட்பம் வளரும் நாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இன்னும் சில ஆண்டு சோதனைக்குப் பின் டில்லி சாந்தினி சவுக்கில் தானோட்டிக்காரை சோதிக்கத்தான் போகிறார்கள். Mobileye –யின் குறிக்கோள்களில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரைத் தொடரில் பல புதிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தத் தேவையிருந்தது. சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் சொற்கள் புதிதாக உருவாக்கவும் நேரிட்டது. புதிய தொழில்நுட்பம் பற்றி தமிழில் எழுதுவதன் அலாதி அனுபவம் இது. இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன் வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Licensing உரிமம்
Regulatory bodies சீர்படுத்தும் அமைப்புகள்
Insurance காப்பீடு
Vehicle fleets வாகனத் தொகுதி அமைப்புகள்
Auto safety standard bodies வாகனப் பாதுகாப்பு அமைப்புகள்
Self-driven cars or Driverless cars தானோட்டிக் கார்கள்
Parallel park assist தானே இணை நிறுத்தும் வசதி
Proximity warning feature அருகாமை எச்சரிக்கை அம்சம்
Traffic lanes வரைபாதை
Lane departure warning feature வரைபாதையிலிருந்து சறுக்கல், எச்சரிக்கை அம்சம்
Stop sign நிறுத்தும் குறி
Four way stop நான்கு வழி நிறுத்தம்
Microcomputer/chip revolution நுண்கணினிப் புரட்சி
Windshield wiper கண்ணாடி நீர் துடைப்பான்
Electric ignition மின் கார் துவக்கம்
Turn indicator திருப்புக் குறிகாட்டி
Cruise control வேக சுயக்கட்டுப்பாடு
Electronic fuel injection மின்னணு எரிபொருள் உட்செலுத்தல்
Car diagnostic codes கார் பிரச்னை குறிகைகள்
Collision avoidance systems மோதல் தவிர்ப்பு முறைகள்
Survival எஞ்சுதல்
Innate intelligence உள்ளார்ந்த அறிவு
Machine vision challenge எந்திரப் பார்வை சவால்
Diagnostic computer பிழை ஆய்வுக் கணினி
Level flight சம அளவில் பறப்பது
Park assist feature காரை நிறுத்தும் உதவி அம்சம்
Adaptive cruise control feature சூழலுக்கேற்ப வாகனத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அம்சம்
Ultrasonic கேளா ஒலி
Algorithm கணினி மென்பொருள் நெறிமுறை
Location இருப்பிடம்
Traffic signs சாலைச் சைகைகள்
Artificial intelligence (AI) technology செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
Artificial neural network செயற்கை நரம்பணு வலையமைப்பு
Machine learning எந்திரக் கற்றலியல்
Manufacturing robots தயாரிப்பு ரோபோக்கள்
Feedback பின்னூட்டம்
Deep Learning ஆழக் கற்றலியல்
Calculus நுண் கணக்கியல்
Matrix algebra அணி கணக்கியல்
Nodes கணுக்கள்
Bias சார்பு
Parallel computing ஒப்பிணைவு கணிமை
Input layer உள்வாங்கும் அடுக்கு
Hidden layers மறை அடுக்குகள்
Low resolution குறைந்த பிரிதிறன்
Pixels பட மூலம்
Matrix manipulation of the pixels படமூல அணிமாற்றங்கள்
Automobile platform காரின் அடிப்படைக் கட்டுப்பாடு
Fossil fuel engine தொலெச்ச எரிபொருள் எஞ்சின்
Sensor kit கருவிக் கூட்டு
Automotive recalls கார்களைத் திரும்ப அழைக்கும் ஒழுங்குமுறை
Law சட்டம்
Emission tests உமிழ்வு சோதனைகள்
Seat belt இருக்கை வார்
Air bags காற்றுப் பைகள்
Insurance காப்பீடு
Black box கருப்புப் பெட்டிகள்
Regulation ஒழுங்குமுறைகள்
Vehicle insurance வாகனக் காப்பீடு
Compensation ஈடுகட்டுவது
Repair costs பழுதுபார்க்கும் செலவு
Driver liability ஓட்டுனர் காப்புபிணை
Insurance premium காப்பீடு தவணைத்தொகை
Product liability பொருள் காப்புப் பிணை
Air bags காற்றுப்பை
Warranty claims expense உத்தரவாதப் பழுதுச் செலவு
Driver negligence ஓட்டுனரின்கவனமின்மை

 

கட்டுரையில், கடைசியில் சுட்டிகளைத் தருவதாக எழுதியிருந்தேன். சில சுட்டிகள் எளிமையான ஆரம்பநிலைக் கட்டுரைகள் மற்றும் கானொலிகள். மற்றவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் – மிகவும் டெக்னிகலானவை. முடிந்தவரை, இவற்றைப் பிரித்து ஒரு நட்சத்திர மதிப்பீட்டுடன் இங்கே அளித்துள்ளேன். அதென்ன நட்சத்திர மதிப்பீடு?

நட்சட்த்திரமதிப்பீடு விளக்கம்
* ஆரம்பநிலை புரிதலுக்கான சுட்டி
** சற்று விவரமானது. அவ்வளவு டெக்னிகல் அறிவுத் தேவையில்லை
*** மிக விவரமானது. கொஞ்சமாவது டெக்னிகல் அறிவு தேவை
**** மிகவும் டெக்னிகலான ஆராய்ச்சிக் கட்டுரை

 

சுட்டிகள்/மேற்கோள்கள்

துறை சுட்டி நட்சத்திரமதிப்பீடு
தானோட்டிக் கார் பற்றிய பொதுச்சுட்டிகள் http://www.mckinsey.com/industries/automotive-and-assembly/our-insights/ten-ways-autonomous-driving-could-redefine-the-automotive-world *
http://www.wired.com/brandlab/2016/03/a-brief-history-of-autonomous-vehicle-technology/
https://techcrunch.com/2015/01/18/autonomous-cars-are-closer-than-you-think/ **
http://www.forbes.com/sites/kbrauer/2016/03/02/top-10-autonomous-car-facts-when-will-self-driving-cars-arrive-whats-holding-them-up/#66f58c7c4f1a *
http://www.economist.com/news/science-and-technology/21696925-building-highly-detailed-maps-robotic-vehicles-autonomous-cars-reality *
http://www.novatel.com/industries/autonomous-vehicles/#products *
https://medium.com/the-ferenstein-wire/futuristic-simulation-finds-self-driving-taxibots-will-eliminate-90-of-cars-open-acres-of-618a8aeff01 *
http://www.mckinsey.com/industries/automotive-and-assembly/our-insights/self-driving-cars-and-the-future-of-the-auto-sector *
http://time.com/3719270/you-asked-how-do-driverless-cars-work/ *
தானியக்க வரலாறு http://www.computerhistory.org/atchm/where-to-a-history-of-autonomous-vehicles/ *
டெக்னிகல் சுட்டிகள் http://auto.howstuffworks.com/under-the-hood/trends-innovations/driverless-car.htm **
https://en.wikipedia.org/wiki/Autonomous_car *
http://www.wired.com/tag/autonomous-vehicles/ *
https://www.google.com/selfdrivingcar/ *
http://www.wired.com/2012/01/ff_autonomouscars/ *
http://www.popsci.com/tags/autonomous-cars *
http://www.rand.org/pubs/research_reports/RR443-2.html ***
http://slidepapers.in/wp-content/uploads/2016/03/Autonomous-Predictions-Vehicle-Implementations.pdf ****
http://www.caee.utexas.edu/prof/kockelman/public_html/TRB16CAVTechAdoption.pdf ***
http://spectrum.ieee.org/automaton/robotics/artificial-intelligence/how-google-self-driving-car-works **
http://www.blg.com/en/NewsAndPublications/Documents/Autonomous-Vehicles2016.pdf ***
https://dzone.com/articles/top-three-challenges-facing-autonomous-vehicles **
http://www.livescience.com/50841-future-of-driverless-cars.html *
http://www.cbronline.com/news/internet-of-things/smart-technology/sensors-wifi-on-board-computing-5-technologies-making-todays-driverless-cars-possible-4859735 ***
http://www.acola.org.au/PDF/SAF05/2Collective%20technologies.pdf ***
http://gizmodo.com/6-simple-things-googles-self-driving-car-still-cant-han-1628040470 ***
https://www.wpi.edu/Pubs/E-project/Available/E-project-043007-205701/unrestricted/IQPOVP06B1.pdf ***
சமுதாயத் தாக்கங்கள் http://www.digitaltrends.com/cars/uber-lyft-drivers-threat-autonomous-cars/ **
https://groups.csail.mit.edu/mac/classes/6.805/student-papers/fall14-papers/Autonomous_Vehicle_Technologies.pdf ***
http://www.autoinsurancecenter.com/top-20-pros-and-cons-associated-with-self-driving-cars.htm **
http://economictimes.indiatimes.com/industry/auto/news/why-indian-roads-will-take-decades-to-be-ready-for-self-driving-cars/articleshow/52018034.cms *
லைடார் https://www.youtube.com/watch?v=EYbhNSUnIdU *
http://www.lidarmag.com/content/view/10780/2/ *
http://www.lidar-uk.com/how-lidar-works/ **
http://spectrum.ieee.org/cars-that-think/transportation/sensors/quanergy-solid-state-lidar ***
https://www.ted.com/talks/chris_urmson_how_a_driverless_car_sees_the_road?language=en **
http://www.businessinsider.com/difference-between-google-and-tesla-driverless-cars-2015-12 **
http://www.nvidia.ca/object/drive-px.html **
http://www.templetons.com/brad/robocars/cameras-lasers.html ***
https://www.technologyreview.com/s/539841/one-camera-is-all-this-self-driving-car-needs/ **
http://www.mouser.com/applications/autonomous-car-sensors-drive-performance/ ***
http://www.allaboutcircuits.com/news/tesla-vs-google-do-lidar-sensors-belong-in-autonomous-vehicles/ ***
http://auto-sens.com/the-challenges-facing-autonomous-vehicles/ **
எந்திரப் பார்வை http://www.roborealm.com/ **
http://www.vision-systems.com/articles/print/volume-16/issue-9a/features/machine-vision-gets-moving-part-i.html ***
http://www.cs.colostate.edu/~draper/papers/buluswar_ijeaai98.pdf ****
http://cs231n.github.io/ ****
http://www.templetons.com/brad/robocars/cameras-lasers.html ***
https://www.youtube.com/watch?v=40riCqvRoMs **
https://www.youtube.com/watch?v=dz_jeuWx3j0  – Deep Learning history ***
https://sagar.se/files/wasa2015.pdf ****
செயற்கை நரம்பணு வலையமைப்பு http://www.explainthatstuff.com/introduction-to-neural-networks.html ***
http://www.andreykurenkov.com/writing/a-brief-history-of-neural-nets-and-deep-learning/ ***
https://www.youtube.com/watch?v=l2dVjADTEDU Hinton *
http://image-net.org/index **
https://techcrunch.com/2016/12/01/facebooks-advice-to-students-interested-in-artificial-intelligence/ ***

சொல்வனம் – நவம்பர் 2017

தானோட்டிக் கார்கள் – போக்குகள் மற்றும் எதிர்காலம் – பகுதி 14

காரை ஓட்டிச் செல்லும் பொழுது நமது மனம் கார் ஓட்டுவதைப் பற்றி மட்டுமே சிந்தனை செய்வதில்லை.

“அலுவலகத்தில் வீட்டுச் சாவியை விட்டு விட்டேனே” என்று மனம் அங்கலாய்க்கிறது.

”அடுப்பில் கொதிக்கும் ரசத்தைப் பார்த்தேன். ஆனால், அடுப்பை அணைத்தேனா?” என்று சந்தேகம் வருகிறது.

”இப்படி வியாபாரத்தில் காலை வாரி விடுவான் என்று ஏன் நான் எதிர்பார்க்கவில்லை?” என்று கோபம் வருகிறது.

“குழந்தை இப்படி விழுந்து விட்டதே. எத்தனை அடியோ!” என்று பதைபதைக்கிறது.

இப்படிக் கார் ஓட்டும் பொழுது மனம் அலை பாய்ந்தால். சாலை விதிகளை மீறி நம்மை விபத்திற்கு அருகே கொண்டு செல்கிறது. சில சமயம் விபத்தில் சிக்குகிறோம். தானோட்டிக் காருக்கு இந்த வகை கவனச் சிதறல்கள் இல்லை. சாலை மற்றும் அதன் விதிகள் மீதே குறியாய் இருக்கும் தானோட்டிக் கார் மனிதரைப் போல சிந்தனைச் சிக்கல்களில் மாட்டிக் கொள்வதில்லை. பிரச்னை என்னவென்றால், எப்படி மனிதர்களுடன் சாலைகளைப் பகிர்ந்து கொள்வது என்பது. அத்துடன், எத்தனைதான் சோதனைகளில் வெற்றி பெற்றாலும், மனித ஓட்டுனர்களை விடப் பல மடங்கு நல்ல காரோட்டியாக இருக்க வேண்டும். மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட சாலை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.

உலகின் பல நாடுகள்/நிறுவனங்கள்,  இந்தத் தொழில்நுட்பத்தின் நல்முகத்தைக் கண்டு, பல கோடி டாலர்கள் முதலீட்டில், ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் கொட்டியுள்ளார்கள். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் எப்படி நம் சமூகங்களைப் பாதிக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும், இன்று நமக்குத் தெரிந்த போக்குகள், சவால்களை வைத்துச், சில யூகங்களை முன் வைக்க முடியும். இதில் எத்தனை யூகங்கள் உண்மையாகும் என்று சொல்வது கடினம்.

நம்முடைய இந்தப் போக்கு பற்றிய யூகங்களைச் சில ஐந்து ஆண்டுகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், சற்று தெளிவு பிறக்கலாம். இதில் சொல்லியுள்ள யூகங்கள் ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியிலிருந்து அடுத்த ஐந்தோ அல்லது பத்தாண்டு இடைவெளிக்கோ நடைமுறை பிரச்னைகளைச் சார்ந்து மாறலாம். நம்முடைய இந்த அலசல் ஒரு 20 ஆண்டுகளை மட்டுமே கருத்தில் கொள்ளும். அதன் பின் என்ன நடக்கும் என்பதை யூகிப்பதும் கடினம்.

முதல் 5 ஆண்டுகள் (2017 – 2021)

  1. பல புதிய சோதனைத் தானோட்டிக் கார்களைச், சில பகுதிகளில் அறிமுகப் படுத்த கார் நிறுவனங்கள் முயற்சிக்கலாம். அதுவும் பெரிய ஊபர் போன்ற இணையக் கார் வாடகை அமைப்புகளுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம். இதில் சிக்கல்களும் உருவாகலாம். சமீபத்தில் (டிசம்பர் 2016) ஊபர் நிறுவனத்தை, இவ்வகைச் சேவைகளை கலிஃபோர்னியாவில் நிறுத்தச் சொல்லி அரசாங்கம் கட்டளையிட்டது நினைவிருக்காலாம்
  2. சோதனைகள், இரண்டு விதத்தில் முன்னேறலாம். முதலில் Otto போன்ற ஊபரின் லாரி சேவைகள் அதிக மழை மற்றும் பனிப் பொழிவு அற்ற அமெரிக்க மாநிலங்களில் சரக்குப் போக்குவரத்திற்குச் சோதிக்கப்படலாம். லாரி டிரைவர்கள் பற்றாக்குறை என்பது பெரிய சாக்காக முன் வைக்கப் படலாம். இந்தச் சோதனைகளின் வெற்றி மிகவும் முக்கியமானது. இதுவே பல்வேறு லாரி நிறுவனங்களுக்கும், இவ்வகைத் தானோட்டி லாரிகள் ஒரு சரியான தீர்வா என்று முடிவு செய்ய உதவும்
  3. தானோட்டிக் கார்கள், பலத்த மழை மற்றும் பனிப்பொழிவில் பயணம் செய்யும் சோதனைகள் ஆரம்பிக்கப்படும். பனிப் பொழிவில் பிர்த்யேகமான டயர்கள் கொண்டு இயங்குவதற்கும், அனைத்து சீசன் டயர்களுடன் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மழையில் டயர்களின் சாலைப் பிடிப்பு வேறுபடும். ஆனால், இவை மிக முக்கிய பிரச்னைகள் என்பதால், இதில் அதிக முதலீடு இருக்கும். கனடாவின் Blackberry இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவை விட இதற்கு ஏதுவான நாடு எதுவாக இருக்க முடியும்?
  4. கூகிள் தன்னுடைய வழக்கமான வியாபார அணுகுமுறையைத் துறந்து தன்னுடைய தானோட்டிக் கார்த் தொழில்நுட்பத்தை Waymo  என்ற நிறுவனம் மூலம் பல்வேறு கார் தயாரிப்பாளர்களுக்கு விற்கத் தயாராகி வருகிறது, தன்னுடைய ஆண்ட்ராய்டு செல்பேசி இயக்க மென்பொருள் போலல்லாமல் இதை விற்பனைப் பொருளாக்குவது கூகிளுக்கு இது முதல் முறை. ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் கூகிளுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி வருகிறது
  5. போக்குவரத்து விதிகள், சில அமெரிக்க மாநிலங்களில் தளர்த்தப் படலாம். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் என்பது இக்காரின் தானியக்க வசதியின் பெயர். டெஸ்லாவைத் தொடர்ந்து மற்ற கார் நிறுவனங்களும், இது போன்ற முறையைப் பின்பற்றலாம். அதாவது, 4 நிமிடம் வரை, ஒரு ஓட்டுனர், இருக்கையில் இருக்கையில், தானோட்டி முறையில் கார் பயணிக்கலாம். அதற்கு மேல், பல வித எச்சரிக்கைகளுடன் ஓட்டுனரிடம் காரைக் கட்டுப்படுத்தத் தானோட்டிக் கார் விட்டுவிடும்

இரண்டாம் 5 ஆண்டுகள் (2022 – 2027)

  1. சாலை விதிகள் தானோட்டி வாகனங்களுக்குத் தோதாகச் சற்றுத் தளர்த்தப்படலாம். அதிலும், மிக முக்கியமாக, நெடுஞ்சாலை விதிகள் முதலில் தளர்த்தப்படலாம்
  2. நெடுஞ்சாலையில் உள்ள டீசல் பம்புகள் தானோட்டி லாரிகளுக்குத் தக்கவாறு சில பம்புகளை மாற்றலாம். இவை ரோபோ கரங்களால் இயங்கும் பம்புகள்
  3. சில அமெரிக்கத் தென் மாநிலங்கள், பெரிய நகரங்களில், தானோட்டிக் கார்களுக்குத் தனியான வரைபாதைகளை உருவாக்கலாம். சாலைப் பராமரிப்பிற்கு, இணையக் கார் வாடகை நிறுவனங்கள் பணம் கட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்
  4. இப்படித் தனியான வரைபாதைகள் உருவாக்கும் நகரங்கள், ஊருக்கு வெளியே தானோட்டிக் கார்களை நிறுத்த இடம் தரவேண்டும். இது மிகப் பெரிய தகராறான விஷயம். இதில் நெடு நாள் குத்தகை என்று பல புதிய விஷயங்களும் அடங்கும். நகர மைய கார் நிறுத்தும் வாடகை வசூலை ஈடுகட்ட நகரங்கள் முயற்சிக்கும். இந்த இழுபறியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது கடினம். அத்துடன், இந்தக் கால கட்டத்திலா, அல்லது அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேறுமா என்றும் சொல்வது கடினம்
  5. ஊபர் போன்ற நிறுவனங்கள், சில பகுதிகளில் மனித ஓட்டுனர்கள், மற்றும் சில பகுதிகளில் தானோட்டிக் கார்களை இயக்குவதால், பல தொழிலாளர் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரும்
  6. இணையக் கார் வாடகை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் தானோட்டிக் கார்களை, அரசாங்கப்  போக்குவரத்து அமைப்புடன் முன் பதிவு செய்து கொள்ள வேண்டி வரும். இதில் உள்ள காப்புப்பிணை விஷயங்களும் தீர்க்கப்பட வேண்டும். நிறுவனக் காப்புப்பிணைப் பிரச்னை தனியார் காப்புப்பிணையை விட முதலில் தீர்க்கப்படும்
  7. தானோட்டிக் கார் என்பது பரவலாக, 40,000 டாலர் கார் வரை ஒரு அம்சமாக இருக்கும். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் போன்ற அமைப்பே இன்னும் நிலவும் என்பது என் எண்ணம். சாலை விதிகள் மாறாதவரை ஒரு வினோத அம்சமாகவே இவை இருக்கும்
  8. தானோட்டிக் கார் நிறுவனங்கள், நீதி மன்றங்களை நாடி பல்வேறு ஓட்டுனர் சார்ந்த சட்ட விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டி வரும். இவை மிக சீரியஸாக, ஒரு நுகர்வோர் பிரச்னையாக முன் வைக்கப்படும். தானோட்டிக் கார் நிறுவனங்கள் எத்தனை காப்புப்பிணையை ஏற்றுக் கொள்ளும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. என் பார்வையில், இந்தப் பிரச்னை எளிதில் இந்த ஐந்தாண்டு காலத்தில் தீர்க்கப்படாது
  9. வளரும் நாடுகள் பொருள் காப்புப்பிணைச் சட்டங்களை விவாதிக்கத் தொடங்கும். பல வளரும் நாடுகள் புதிதாக இவ்வகைச் சட்டங்களை முன் வைக்கும். இதனால், தானோட்டிக் கார் அல்லாத மனித ஓட்டுனர் கார்களும் பயன் பெறும்
  10. சரக்குப் போக்குவரத்துப் பாதிக்குப் பாதித் தானோட்டி லாரிகளுக்கு மாறிவிடும்
  11. மழை மற்றும் பனிப்பொழிவில் தானோட்டிக் கார்கள் மனிதர்களைவிட ஒழுங்காக ஓட்டுவது ஒரு பெரிய தானோட்டி கார் டெமோவாக மாறும்

மூன்றாம் 5 ஆண்டுகள் (2028 – 2032)

  1. வரண்ட, மழை மற்றும் பனிப்பொழிவு உள்ள சாலைகளில் எளிதாகக் காரோட்டும் முறைகளை மாற்றிக் கொள்ளும் தானோட்டிக் கார்கள் அறிமுகமாகும்
  2. எல்லாக் கார் தயாரிப்பாளர்களும் தானோட்டிக் கார் அம்சங்களை அறிமுகப்படுத்துவார்கள். இவ்வகை அம்சமற்ற கார்கள் மற்றும் லாரிகளை விற்பது கடினமாகிவிடும்
  3. கார், பஸ் மற்றும் லாரிகளின் உடல் பகுதிகள், தானோட்டலுக்குத்  தேவையான உணர்விகளுடன் உருவாக்கப்படும். குறிப்பாக, காமிராக்கள், கேளா ஒலி உணர்விகள், மற்றும் ராடார்கள் இதில் அடங்கும்
  4. பொதுப் போக்குவரத்தில் தானோட்டிப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். இவற்றுக்காக தனியான வரைபாதையும் உருவாக்கப்படும். பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள், நுகர்வோரின் தானோட்டித் தொழில்நுட்பம் பற்றிய பயங்களை அகற்ற மிகவும் பயன்படும்
  5. அதிகமாகத் தானோட்டி அம்சங்கள் உள்ள கார்கள் விற்பனை, பொதுச் சாலைச் சட்டங்களை மாற்ற அரசுக்கு அழுத்தம் ஏற்படும். பல சட்ட ஆரம்பச் சறுக்கல்களை இந்த ஐந்தாண்டில் பார்க்கலாம். ஏனென்றால், முழுவதும், மனிதக் கார்கள் சாலையிலிருந்து நீங்கியிருக்காது. சட்டம் இரு தரப்பினருக்கும் – அதாவது, மனிதர் மற்றும் தானோட்டிக் கார்களுக்கும் நடுநிலையாக உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு இமாலயப் பிரச்னை. அத்துடன், எல்லாச் சிக்கல்களையும் யாருமே முன்கூட்டியே அறிய முடியாது. மனிதக் காரோட்டிகளுக்கான சட்டங்கள் ஓரளவிற்கு முதிரவே ஒரு 50 முதல் 60 ஆண்டுகள் பிடித்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
  6. நகர அரசாங்கங்கள் கையைப் பிசையும் முதல் ஐந்தாண்டாக இதுவே இருக்கக்கூடும். ஏனென்னில், இவற்றின் கார் நிறுத்தும் வருமானம் ஏராளமாகக் குறைந்துவிடும். அத்துடன், புதிய புறநகர் பகுதிகளில், கார் கராஜ் மற்றும் கார் செலுத்தும் வழி இரண்டும் தேவையற்று போய்விடும். அதாவது, வளரும் நாடுகளில் உள்ளது போல, 800 சதுர அடி வாழுமிடம் என்றால், 1,000 சதுர அடி நிலம் போதுமானது. இன்றைய புறநகர் அரசாங்கங்கள், இதே 800 சதுர அடி வாழுமிடத்திற்கு, குறைந்தபட்சம், 2,000 சதுர அடி நிலம் என்று விற்கப்படுகிறது. எஞ்சியுள்ள 1,200 சதுர அடிக்கு கார் கராஜ், கார் செலுத்தும் வழி மற்றும் ஒரு சிறிய புல்தரை என்று விற்கப்படுகிறது. வரி என்னமோ 2,000 சதுர அடிக்கு என்று கணக்கிடப்படுகிறது. இதுவே 1,000 சதுர அடியானால், உள்ளூர் அரசாங்கத்திற்கு வரி வருமானம் இடிக்கும். புதிய வரிகளைத் தானோட்டி கார் நிறுவனங்களிடம் வசூலிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல
  7. கார் வாங்குவதும் குறையத் தொடங்கலாம். இன்று சென்னையில் பல இடங்களுக்கு வருவதில்லை என்று அடம்பிடிக்கும் ஆட்டோக்களைப் போல இருந்தால், மேற்குலகில் சரிப்படாது. நுகர்வோர் இவ்வகைத் தானோட்டிக் கார்/பஸ் சேவைகளை, ஒரு அடிப்படை உரிமையாக மாற்றக் கோரலாம்!
  8. தானோட்டி வாடகைக் கார் நிறுவனங்கள், பல புதிய சேவைகளை உருவாக்கலாம். அதாவது, ஒரு வாரத்தில், ஒரு பயணியின் பல்வேறு தேவைகளை இணையம் மூலம் தானோட்டிக் கார் நிறுவனம் பூர்த்தி செய்யலாம். ஐந்து வேலை நாட்களில் காலையும், மாலையும் ஒரு நுகர்வோரின் தேவைக்கேற்றபடி, அவரது வீட்டிலிருந்தும், அலுவலகம்/ தொழிற்சாலையிலிருந்தும், அழைத்துச் செல்வது, வாரக் கடைசியில் குறிப்பிட்ட கடைகளுக்குச் செல்வது என்று பல விதத் தனிப்பட்ட வசீகரப் ’பேக்கேஜ்’ சேவைகள் வரத் தொடங்கும்
  9. தானோட்டி வாடகைக் கார் நிறுவனங்கள், நகர அரசாங்கங்களின் வருமான அழுத்தத்திலிருந்து வாடுவதற்கு பதில், தன்னுடைய கார்களில், விளம்பரங்களைச் சேர்த்து, புதிய வருமானம் ஈட்ட முயற்சிக்கலாம். பயணிகளின் எரிச்சலுக்கும் இதனால் ஆளாகலாம்
  10. சிக்கலான வளரும் நாடுகளில் உள்ள போக்குவரத்து சவால்களையும் – உதாரணம், பழைய டில்லியில் உள்ள சாந்தினி செளக், சென்னை பாரி முனை, கல்கத்தாவின் மைய சாலைகள், மும்பையின் க்ராஃபோர்ட் மார்கெட் – சமாளிக்கக்கூடிய தானோட்டிக் கார்கள் சோதனைக்கு வரும். இன்றே இவற்றைப் பற்றிய சிந்தனை பல செயற்கை நுண்ணறிவு பற்றிய கருத்தரங்குகளில் பேசப்படுகிறது
  11. மேற்குலகில், ஒரு மாபெரும் தானோட்டிச் சாலை ஒழுங்குமுறைக் கல்வித் திட்டம், காவலர்களுக்குப் தொடங்கப்படலாம்

நான்காம் 5 ஆண்டுகள் (2033 – 2037)

  1. பல பொதுச்சாலை விதிகள் கடந்த 10 ஆண்டு அனுபவத்தைக் கொண்டு மாற்றி அமைக்கப்படலாம். மேற்குலகில், கார்களின் சொந்தக்காரர்கள் குறைந்து கொண்டே வரலாம். பழைய, மனிதக் கார்கள் ஒரு 40% -க்கு தள்ளப்படலாம். மனிதக் கார்களைப் பராமரிப்பதும் ஒரு பெரும் செலவான விஷயமாகலாம்
  2. வளரும் நாடுகளில், சாலை விதிகள் மாறத் தொடங்கலாம். அத்துடன், தானோட்டிக் கார்கள் மற்றும் லாரிகள் சோதனை கட்டத்திலிருந்து, பொதுப் பயன்பாட்டிற்கு மாறலாம்
  3. மேற்குலகில், தானோட்டிச் சாலை ஒழுங்குமுறைக் கல்வித் திட்டம், காவலர்களுக்குப் பயணளிக்கத் தொடங்கலாம். புதியக் காவலர்கள், இவ்வகைக் கார்கள் எங்கு எல்லை மீறுகின்றன என்பதைப் பழைய காவலர்களை விடச் சுட்டியாகக் கண்டுபிடிக்கக்கூடும்
  4. தானோட்டிக் கார்களின் விலை 30,000 டாலர்களை விடக் குறையத் தொடங்கலாம். அத்துடன், சூரிய ஒளி மற்றும் மின்கலத்தால், இவை இயங்கத் தொடங்கலாம். இந்த விலைக்குக் கார் வேண்டுமானால், தொல்லெச்ச எரிபொருளை மற்றும் எண்ணெய்களைத் துறக்க வேண்டும்
  5. வளரும் நாடுகளின் சிக்கலான சாலைகள், யூரோப்பின் பழைய நகரப் போக்குவரத்துச் சவால்களைத் தானோட்டிக் கார்கள் சமாளிக்கத் தொடங்கிவிடும்
  6. லாரி மற்றும் பஸ் டிரைவர் என்பது ஒரு மிகச் சிலரே மேற்குலகில் ஒரு தொழிலாக வைத்திருக்கக்கூடும்
  7. வீட்டிற்கு மளிகை சாமான்களை டெலிவரி செய்வது போன்ற வேலைகளைத் தானோட்டிக் கார்களே செய்யும் சேவை உருவாகும். இதே போல, குழந்தைகளைப் பாதுகாப்பாக வாரக்கடைசி வகுப்புகளுக்குச் செல்வது, வீட்டிற்குத் திரும்புவது போன்ற வேலைகளையும் தானோட்டிக் கார்களே செய்யும்
  8. நகர விரிவாக்கம் 2017 –ல் இருப்பதை விட இன்னும் அதிகமாகலாம். நகர மையங்களில் கார்களை நிறுத்துமிடம் என்பது சரித்திரம் ஆகலாம்
  9. போக்குவரத்து நெரிசல் விஷயத்தில் தானோட்டிக் கார்கள் உதவிதா இல்லையா என்ற பட்டி மன்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
  10. பல கார் நிறுவனங்கள் மூடப்படலாம். ராட்சச இணையத் தானோட்டி வாடகைக் கார் நிறுவனங்களுக்கு விற்று அதிக லாபமில்லாமல், சில நிறுவனங்களே கார் தொழிலில் ஈடுபடலாம்

இந்த 40 யூகங்களில் 20 யூகங்கள் நிச்சயமாக நடக்கும் என்பது என் எண்ணம். சற்று இந்த ஐந்தாண்டோ அடுத்த ஐந்தாண்டோ அல்லது பத்தாண்டோ என்பது மட்டுமே திட்டவட்டமாகச் சொல்ல முடியாதது.

சொல்வனம் – அக்டோபர் 2017

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம் – ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது? -பகுதி 9

2015 –ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள மிஷிகன் மாநிலத்திற்குச் சென்றிருந்தேன். இந்திய உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு, எனக்குப் பக்கத்தில் உள்ள Best Buy  என்ற மின்னணுச் சில்லரை வியாபாரக் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

அங்கு விடுதியில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவரிடம் வழி கேட்டேன். அங்கு, மேஜையிலிருந்த ஆண்ட்ராய்டு திறன்பேசியிடம், ’பக்கத்தில் Best Buy எங்கிருக்கிறது?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர் கையுறை அணிந்திருந்ததால், இப்படி கூகிள் வரைபடத்துடன் பேசினார்.

சிவராமனோ, மாணிக்கமோ அவர் பெயர் நினைவில்லை. எப்படி கூகிள் வரைபடம், அவருடைய இந்திய ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டது? சரியாக அந்த விடுதியிலிருந்து கடைக்கு வழியைக் காட்டியது. திறன்பேசியைச் சற்று திருப்பி என்னைப் படிக்கச் சொன்னார் அவர்.

எந்திரக் கற்றலியல் ஒன்றும் எதிர்காலச் சமாச்சாரம் இல்லை. இன்று கூகிளின் பல முயற்சிகளில் எந்திரக் கற்றலியல் மறைந்துள்ளது. சமீபத்திய கூகிள் பிக்ஸல் திறன்பேசி ஒரு செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட முதல் திறன்பேசி என்று ஒரு தொழில்நுட்பக் கட்டுரையில் சமீபத்தில் படிதேன்.

~oOo~

ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், சின்னச் சின்ன சோதனைகளில் ஓரளவு வெற்றி பெற்ற இவ்வகைச் செயற்கை நரம்பணு வலையமைப்புகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்த வருடம் – 2012. உலகம், இது வெறும் பலகலைக்கழக விளையாட்டு அல்ல என்று சீரியஸாக எடுத்துக் கொண்டது இவ்வாண்டில். இதற்குக் காரணம் கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று உருவாக்கிய நிரல், பல கோடிப் படங்களை மிகக் குறைந்த தவறுகளுடன் சரியாக அடையாளம் காட்டியது. ஜெஃப் ஹிண்டன் தலைமையிலான இக்குழு, எந்திரக் கற்றலியல் உலகில் புரட்சி செய்தது என்று தாராளமாகச் சொல்லலாம். இத்தனைக்கும் அவர்களுடைய செயற்கை நரம்பணு வலையமைப்புக்கு வெறும் இரண்டு வாரப் பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டது.  எப்படி இது திடீரென்று சாத்தியமானது?

திடீரென்று எதுவும் நடக்க வில்லை. ஸ்டாண்ஃபோர்டு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்கள், இணையத்தில் உள்ள பல கோடிப் படங்களை, பல்லாயிரம் தன்னாவலார்கள் மூலம் பட்டியலிட்டது. இதில், அன்றாடப் பொருள்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டார்கள். கூகிள் இதற்குப் பல விதத்திலும் உதவியது. பல கோடி படங்களை கூகிள் இன்றும் தன்னுடைய தேடல் எஞ்சின் மூலம் தேக்குகிறது. இது மிகவும் பெரிய ஒரு பணி. நாய் என்றால், பல லட்சம் நாய்களின் படங்கள், நாறகாலி என்றால், இன்னும் சில லட்சம் என்று இந்த Imagenet உருவாகியது.

உதாரணத்திற்குக், கீழே உள்ளப் பட்டியல், சில வகைப்பாடுகளின் பட்டியல் அளவைக் காட்டுகிறது. 339 ஆயிரம் மலர்களின் படங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள்,  அதே போல, 374 ஆயிரம் வாகனங்களின் படங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள். ஒவ்வொரு வகையிலும் பல நூறு வேறுபாடுகள் அடங்கும், உதாரணத்திற்கு, ஒரு ஃபோர்டு ஃபோகஸ் காரின் நூற்றுக்கணக்கான படங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் இந்தக் காரின் பல்வேறு கோணங்களில் எடுத்தப் புகைப்படங்கள் அடங்கும்.

High level category # synset (subcategories) Avg # images per synset Total # images
animal 3822 732 2799K
appliance 51 1164 59K
bird 856 949 812K
fish 566 494 280K
flower 462 735 339K
food 1495 670 1001K
fruit 309 607 188K
furniture 187 1043 195K
musical instrument 157 891 140K
plant 1666 600 999K
reptile 268 707 190K
sport 166 1207 200K
tree 993 568 564K
vegetable 176 764 135K
vehicle 481 778 374K
person 2035 468 952K

 

இது எந்திரக் கற்றலியல் துறைக்கு, ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம். எந்திரங்களுக்குப் பல படங்களைக் கற்றுக் கொடுப்பதற்கு மிகவும் முக்கியமான ஒரு முன்னேற்றம் இது. தன்னுடைய பல்லாண்டு உழைப்பை மிக அழகாக இங்கு இதன் ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்;

முக்கியமாகச், செயற்கை நரம்பணு வலையமைப்பிற்குத் தேவையான விஷயம் பயிற்சிப் படங்கள், இவ்வகை வலையமைப்புகளில், பல அடுக்குகள் இருக்கும் என்று சொல்லியிருந்தேன். இந்த அடுக்குகளில் முதல் அடுக்கு  உள்வாங்கும் அடுக்கு (input layer) என்று சொல்லப்படுகிறது. கடைசி அடுக்கு வெளிப்பாடு அடுக்கு (output layer) என்று சொல்லப்படுகிறது. வலையமைப்பின் தேவைக்கேற்ப, விஞ்ஞானிகள் பல இடை அடுக்குகளை நம் மூளையில் உள்ளது போல உருவாக்குகிறார்கள். இவற்றை மறை அடுக்குகள் (hidden layers) என்று சொல்லப்படுகிறது. இந்த அடுக்குகள் என்ன செய்கின்றன?

மேல்வாரியாகச் சொன்னால், கீழே விளக்கியுள்ளது போலப் புரிந்து கொள்ளலாம். அடைப்புக்குறிக்குள் கொஞ்சம் டெக்னிகலான விளக்கம். உதாரணத்திற்கு, ஒரு காரின் படத்தை இந்த வலையமைப்பின் முன் வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்

  1. முதல் அடுக்கில் ஓரளவு குறைந்த பிரிதிறன் (low resolution) படத்தின் படமூலம் (pixels) உள்வாங்கப் படுகிறது (இது filtering என்று அழைக்கப்படுகிறது)
  2. அடுத்த அடுக்கில், முதல் அடுக்குடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புகள் அந்தப் படத்தின் முக்கிய வடிவமைப்பு அம்சங்களைப் பிரித்தெடுக்கும் – காரின் டிக்கி, சக்கரம், எஞ்சின் பகுதி, பின் கண்ணாடிகள் போன்ற விஷயங்களை மட்டும் பிரித்தெடுக்கும் (இது, ஏராளமான உயர்க் கணிதமான Convolutions மூலம் நிகழ்கிறது. எந்த அம்சம் ஒரு கணினிக்கு முக்கியம் என்பது கணிதம் மூலமே நிச்சயிக்கப்படுகிறது. டிக்கி, எஞ்சின் போன்றவை ஒரு விளக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளேன்)
  3. அடுத்த அடுக்கில், இன்னும் சில சின்ன வளைவுகள், நீட்டங்கள்  –  காரின் முன்பக்கம் தெரிவதென்றால், ரேடியேட்டர், தலை விளக்குப் பின் பக்கம் தெரிவதானால், டிக்கி விளக்குகள், காரின் பின் மற்றும் முன் கண்ணாடியின் வளைவுகள் போன்ற விஷயங்கள் அடுத்தக் கட்டமாக இருக்கலாம். (இவை ஓரளவு யூகம்தான் – ஒவ்வொரு படியிலும் நடப்பவைச் சிக்கலான படமூல அணி மாற்றங்கள் (matrix manipulation of the pixels) – இவற்றிற்கு ஒரு சரியான காட்சி சார்ந்த விளக்கம் என்பது இயலாத காரியம்)
  4. இப்படிப் படிப்படியாக நிகழும் இந்தப் படமூலச் சிதறல், இன்னும் சில படிகளைத் தாண்டி உள்வாங்கிய படம் காரா என்பதோடு நிற்காமல், இந்த வலையமைப்புப் பயிற்சிக்குப் பிறகு, ஃபோர்டு ஃபோகஸா என்று சரியான சாத்தியக்கூறுகள் வெளி வருவதால், வெளிப்பாடு அடுக்கில் தகுந்த முடிவை எடுக்க முடிகிறது

பயிற்சி மூலம், ஒரு செயற்கை நரம்பணு வலையமைப்பிற்குத் தகுந்த சார்புகளை (bias and weights) உள்வாங்கியிருக்கும். இதனால், தான் பார்க்காத கோணத்தில் ஃபோர்டு ஃபோகஸ் கார் இருந்தாலும், இந்த வலையமைப்பு அதைச் சரியாக அடையாளம் காட்டி விடும். மற்றபடி உள்ளே நடப்பவை கணித ஜாலங்கள் என்றும் கொள்ளலாம்.

இது போலத்தான், சற்று மங்கிய வெளிச்சத்தில், அரைகுறையாகத் தெரியும் லாரிகள், பாதசாரிகள், சைக்கிள்கள், சாலைக் குறிகைகள் எல்லாவற்றையும் தானோட்டிக் கார்கள் அடையாளம் காட்டி முடிவெடுக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் ஃபோர்டு காரின் கலர் முக்கியமில்லை. அதன் அளவுகள், அந்தக் காருக்கும் தானோட்டிக் காருக்கும் உள்ள தூரம், ஃபோர்டு கார் செல்லும் கோணம், இவை எல்லாம் தான் முக்கியம்.

இந்தத் தொழில்நுட்பம், இன்று திறன்பேசியில் சில்லரை வியாபாரக் கடை பேரைச் சொன்னால், ஒலியிலிருந்து, அதை ஒரு தேடல்ச் சொற்றொடராக மாற்றுகிறது. கூகிள் வரைபடம் மற்ற வேலைகளைச் செய்கிறது. இங்குச் செயற்கை நரம்பணு வலையமைப்பின் வேலை, குரலை வைத்துச் சரியான சொல்லைக் கண்டுபிடிப்பது. பல குரல்களிலும் பயிற்சி செய்யப்பட்ட இந்த வலையமைப்பு, நமது மாணிக்கத்தின் ஆணையைப் பல அடுக்குகளில் கணித ஜாலத்தால், சரியாக Best Buy என்று கண்டுபிடித்து விடுகிறது. ஒன்றை கவனித்தீர்களா? நான் மாணிக்கத்தை வழி கேட்ட விடுதியில் திறன்பேசியைச் சுற்றிச் சத்தம் இருந்தது. மற்றவர்கள் சத்தப்படுத்தி/பேசி உண்டு கொண்டிருந்தார்கள். இவ்வகைச் சத்தங்களையும் தாண்டி, இந்தச் செயற்கைத் திறன் மென்பொருள் எப்படிச் சரியாகச் சொற்களைக் கண்டு பிடிக்கிறது? எல்லாம் filtering  மூலம் நடப்பவை. இந்த நிரலுக்கு எஸ்பிபியா அல்லது யேசுதாஸா என்று கண்டுபிடிக்கத் தேவையில்லை. என்ன சொல்கிறார் நமது மாணிக்கம் என்பதே முக்கியம்.

செயற்கை நரம்பணு வலையமைப்பிற்குப் பயிற்சி என்பது ஒரு மிகச் சிக்கலான பிரச்னை. நாம் பார்த்த இரு உதாரணங்களிலும், இதை எளிதில் புரிந்து கொள்ளலாம், Imagenet -ல் 374,000 படங்கள், வாகனப் படங்கள். ஒரு படத்தின் பிரிதிறன்,(resolution)  32 x 32 என்று கொண்டால் கூட, ஒரு படத்திற்கு 1024 படமூலங்கள் உள்ளன. இதற்குக் குறைந்தபட்சம் 1024 செயற்கை நரம்பணுக்கள் முதல் அடுக்கில் தேவை. 374,000 * 1024 = கிட்டத்தட்ட 383 பில்லியன் பயிற்சிப் படமூலங்கள் இதில் அடங்கும் என்றால் தலை சுற்றும் விஷயம். நாம் தலை நரைத்து, இந்தத் தொழில்நுட்பத்தின் பயனையே பார்க்க முடியாது. அதே போல, உலகில் உள்ள பல மனிதக் குரல்களைக் கொண்டு Best Buy  என்று சொல்ல வைத்துச் செயற்கை நரம்பணு வலையமைப்பைப் பயிற்சிக்க முடியாது. இதற்கு என்ன வழி?

இது சற்று நம்புவதற்குக் கடினமான விஷயம். ஆனால், சில வாகனங்களை மட்டுமே ஒரு பயிற்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாகனப் படங்களை உட்கொண்டவுடன் செயற்கை நரம்பணு வலையமைப்பு வாகனம் என்று அடையாளம் காட்டக் கற்றால், மிகவும் எளிதாகிவிடும் அல்லவா? இதைத்தான் சில உயர்கணிமை மூலம் ஜெஃப் ஹிண்டன் மற்றும் யான் லகூன் என்ற இரு விஞ்ஞானிகளும் முன் வைத்தனர். புதிய வாகனங்களைக் கண்டவுடன், தன்னுடைய வலையமைப்பு சார்புத் தன்மையை (bias) மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால், புதிய விஷயங்களையும் இவ்வகை வலையமைப்புகள் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய உலகில் கற்கின்றன. இதனாலேயே இந்தத் துறை எந்திரக் கற்றலியல் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பம் பற்றி வாசகர்கள் தீவிரம் காட்டினால், விவரமாகத் தமிழில் எழுத முடியும். இந்தத் தொடருக்கு இந்த அளவு போதும் என்பது என்னுடைய கணிப்பு.

காமிரா மூலம் வந்த படத்திலிருந்து பல பொருட்களையும் இப்படித்தான் தானோட்டிக் கார் அடையாளம் கண்டுபிடிக்கிறது. அட புதிய 2017 மெர்ஸிடஸ் மாடல் என்று வியக்கத் தேவையில்லை. 16 அடி நீளம், 6 அடி அகலம் உள்ள கார் ஒன்று 300 மீட்டர் காருக்கு முன்னால், 117 கி,மீ. வேகத்தில் பயணிக்கிறது. அதாவது, பயணம் செய்யும் தானோட்டிக் கார் 120 கி,மீ. வேகத்தில் பயணம் செய்கிறது என்றால், 9 நொடி இடைவெளி என்று அர்த்தம். இந்த இடைவெளிக்கு, பாதுகாப்பான வேகம் 90 கி,மீ என்றால், 12 நொடி இடைவெளி என்று கணக்கிடுவது கணினிக்கு பெரிய விஷயமல்ல. உடனே காரின் வேகத்தை 120 -லிருந்து  மணிக்கு 90 கி,மீ வேகத்திற்குக் குறைக்க வேண்டும்.

  1. முன்னே இருப்பது ஒரு நகரும் கார் என்பதையும் அதன் வேகம் மற்றும் இடைவெளி போன்ற விஷயங்களை, விடியோவின் தொடர் ஃப்ரேம்களைக் கொண்டு கணிக்கப்படுகிறது
  2. காரின் வேகத்தைக் குறைக்கக் காரின் அடிப்படைக் கட்டுப்பாட்டிற்கு (automobile platform)  இந்த மென்பொருள் ஆணைகளை அனுப்புகிறது
  3. காரின் அடிப்படைக் கட்டுப்பாடுகள் வேகத்தைக் குறைப்பதோடு, மற்ற விஷயங்களையும் கட்டுப்படுத்துகிறது – இந்த வேகக்குறைப்பு நேருகையில் சாலை வளைந்து போகலாம் – வரை பாதையைப் பார்த்துக் காரைச் சற்றுத் திருப்புவதும் நேர வேண்டும். வரைபாதையைச் சரியாக அளப்பது போன்ற விஷயங்களை அடிப்படைக் காரின் கட்டுப்பாடு, இன்று நன்றாகவே செய்கிறது
  4. மிக முக்கியமான தொழில்நுட்பம் என்பது தானோட்டிக் காரின் கண்ணான செயற்கை நரம்பணு வலையமைப்பு மென்பொருள். ஆனால், இது ஒன்று மட்டுமே எல்லாச் செயல்களையும் ஆற்றுவதில்லை. சுற்றியுள்ள மற்ற விஷயங்களை முடிவெடுக்க மென்பொருள் தேவைப்படுகிறது
  5. இன்னொரு குறிப்பிடத் தகுந்த விஷயம், இந்த முடிவுகள் நொடியின் நூற்றில் ஒரு பங்கு நேரத்தில் நிகழ வேண்டும். இந்த விஷயத்தில் மனிதர்களைத் தானோட்டிக் கார்கள் தூக்கிச் சாப்பிட்டு விடும். இன்றைய வடிவியல் செயலிகள் இந்தக் காரியத்தை நன்றாகவே செய்கின்றன – இவற்றை இயக்குவதென்னவோ செயற்கை நரம்பணு வலையமைப்பு மென்பொருள்
  6. எல்லாம் சரி, திடீரென்று குறுக்கே ஒரு மான் ஓடினால், பல அடுக்குச் செயற்கை நரம்பணு வலையமைப்பு மென்பொருள் வேலை செய்யக் காத்திருக்க முடியாது. இதனால், அருகே என்ன தடைகள் உள்ளன என்று கணிக்கும்  உணர்விகளுக்கும் காரின் அடிப்படைக் கட்டுப்பாட்டிற்கு நேரடித் தொடர்பும் இருக்கும்.

டார்பா சவாலிலிருந்து (DARPA challenge) இன்றைய தானோட்டிக் கார்கள், பல மடங்கு முன்னேறி விட்டன. இன்னும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. இவற்றைப் பற்றிப் பின்னொரு பகுதியில் பார்ப்போம்.

மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் தானோட்டிக் காரின் தொழில்நுட்பம். பிரத்யேக உணர்விகள், மற்றும் அவற்றின் சங்கமம் மிகவும் முக்கியமான ஒரு சவாலான தொழில்நுட்பம். கார்களின் அடிப்படை கட்டுப்பாடுகள் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், இவை சிக்கலானவை என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், இந்த அடிப்படைக் கட்டுப்பாடுகளை இயக்கும் மென்பொருட்களும் சிக்கலானவை. இயக்க அளவுகளை அளக்கும் மென்பொருள் மற்றும் சுற்றுப்புறத்தை அளக்கும் உணர்விகள், மற்றும் ஜிபிஎஸ் கொண்டு முன்னால், பின்னால், வலது மற்றும் இடது பக்கத்தில் இருக்கும் வாகனங்களை அடையாளம் காணும் செயற்கை நரம்பணு வலையமைப்பு மென்பொருள் புதிய தொழில்நுட்பம். இவற்றுடன் காரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள வரைபட மென்பொருளுடனும் சேர்ந்து இவை இயங்க வேண்டும்.

தலை சுற்றுவதைப் போன்று தோன்றினாலும், தானோட்டிக் கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏராளமான சோதனைகளைச் செய்து வருகிறார்கள். என்னதான் எந்திரக் கற்றலியல் முன்னேறினாலும், சாலைகளில் திடீர் அனுபவம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. கார்களுக்கு இது போன்ற அனுபவம் ஏற்படும் பொழுது எப்படிச் சமாளிப்பது என்பது சவால் தான்.

~oOo~

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Input layer உள்வாங்கும் அடுக்கு
Hidden layers மறை அடுக்குகள்
Low resolution குறைந்த பிரிதிறன்
Pixels படமூலம்
Matrix manipulation of the pixels படமூல அணி மாற்றங்கள்
Bias சார்பு
Automobile platform காரின் அடிப்படைக் கட்டுப்பாடு
Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
Algorithm மென்பொருள் நெறிமுறை

சொல்வனம் – ஜூன் 2017

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம் – தானோட்டிக் கார் ஐபேடுக்குச் சக்கரம் வைத்தது போன்றது -பகுதி 7

”தானோட்டிக் கார் ஐபேடுக்குச் சக்கரம் வைத்தது போன்றது’

இதைப் போன்ற அபத்தங்களைத் தொழில்நுட்ப வல்லுனர்களே எழுதி வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய பல குறைகள் உள்ளன;

  1. ஒரு கார் சாலையில் பயணிக்கப் பெளதிக விதிகள் மற்றும் எந்திரப் பொறியியல் விஷயங்களை, ஒரு 150 வருடங்களாகப் பொறியாளர்கள் மெருகேற்றி வந்துள்ளார்கள். இப்படி எழுதுவது, எந்திரப் பொறியியலையே துச்சமாக மதிப்பதற்குச் சமம்
  2. சில புதிய கார்களில் ஐபேடைப் போன்ற திரைகளைப் பார்த்த இந்த எழுத்தாளர்கள், அட, கணினி, இங்கேயும் வந்துவிட்டதே என்ற பாமர அதிர்ச்சியின் வெளிப்பாடே இவ்வகைக் கருத்துக்கள்
  3. கடந்த 25 ஆண்டுகளாக, கார்களில் பெட்ரோலையும் காற்றையும் எந்த விகிதத்தில் கலப்பது, எந்த வெப்பத்தில் பெட்ரோலை உட்பாய்ச்சுவது போன்ற மிக முக்கிய விஷயங்களைக் கணினிகளே செய்து வந்துள்ளன. பாமரர்ப் புரிந்து கொள்ளும் வசீகரத் திரை மற்றும் வண்ணம் இந்தக் கணினிகளுக்குக் கிடையாது. இவற்றை ECU அல்லது Electronic Control Unit  என்று கார்த் தொழிலில் சொல்வதுண்டு
  4. சமீபத்தில் என்னிடம் ஒரு மெக்கானிக் அலுத்துக் கொண்டார் – வர வர, ஒவ்வொரு கார் மாடலுக்கும் ஒரு பிழை ஆய்வுக் கணினி (diagnostic computer) வாங்க வேண்டியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக, கார்களில் என்ன கோளாறு என்பதைக் கணினிக் குறிகைகள் வைத்துதான் முடிவு செய்கிறார்கள்

’எத்தனையோ வருடங்களாக விமானங்களில் ஆட்டோ பைலட் வசதி உள்ளது. காரில் இதைக் கொண்டு வர ஏகத்தும் பில்டப் கொடுத்து மிகைப்படுத்துகிறார்கள்’

இதுவும் தொழில்நுட்ப எழுத்தாளர்கள் அதிகச் சிந்தனையின்றி எழுதிய ஒன்று என்பது என் கருத்து. இதற்குப், பல காரணங்கள் உள்ளன.

  1. விமானங்களில் ஆட்டோ பைலட் வசதி பல ஆண்டுகளாக இருப்பது உண்மை. ஆரம்பத்தில் சம அளவில் பறப்பதற்கே (level flight) பயன்படுத்தப்பட்ட இந்த வசதி, இன்று மேல் செல்வது, கீழ் இறங்குவது (takeoff and landing) என்று எல்லா நிலைகளிலும் பயன்படும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது
  2. ஆனால், விமானத்தைச் செலுத்துவதற்கும் தானாகக் காரைச் செலுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விமானத்திற்கு மேலே சென்றவுடன் பாதை இருந்தாலும், வரைபாதை (traffic lanes) போன்ற ஒரு விஷயமே கிடையாது
  3. சிக்னல் கிடையாது, குறுக்கே கடக்கும் பாதசாரி கிடையாது, திரும்பும் திசைகாட்டி கிடையாது, மிக முக்கியமாக வேக எல்லைகள் கிடையாது
  4. மிகவும் முக்கியமானக் கார் சவால், எத்தனை மணித்துளிக்குள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்பது. எப்பொழுதாவது இன்னொரு விமானம் அருகில் பறந்தாலும், பெரும்பாலும், ஒரு 5 முதல் 6 நிமிட முன்னறிவிப்புக் கிடைக்கும் – தானோட்டிக் கார் மென்பொருளுக்கு 1 வினாடி என்பது பெரிய விஷயம். சாலை விபத்துக்களைத் தவிர்ப்பது 10 வினாடிக்குட்பட்ட முடிவுகளில்! மனித ரியாக்‌ஷன் பெரும்பாலும் ஒரு நொடியில் 3 மூன்று பங்கு நேரத்திற்குள் அடங்கும். எந்திரங்கள் இதைவிடச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்

சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும் – தானோட்டிக் கார்களின் மென்பொருள், விமான ஆட்டோ பைலட்டை விட பல நூறு மடங்கு சிக்கலானது.

அப்படி என்ன தொழில்நுட்பம் இதில் அடங்கியுள்ளது?

கவனி – சீரமை – முடிவெடு – செயலாற்று Observe, Orient , Decide and Act (OODA)  என்பதே காரோட்டுவதன் அடிப்படை. இதுவே, தானோட்டிக் கார்களின் வடிவமைப்பு ரகசியமும். இந்த நான்கு படிகளைச் சற்று விரிவாக ஓர் உதாரணம் மூலமாகப் பார்ப்போம்.

மேற்குலகில், சாலையில் ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் (இரு வாகன விபத்து என்று கொள்வோம்) அங்கேயே நிறுத்திவிட்டு, போலீசாரை வரவழைக்க வேண்டும். விசாரணை நடத்திய போலீஸ் அலுவலர், தன்னுடைய அறிக்கையின் நகலை இரு வாகன உரிமையாளருக்கும் கொடுத்து விடுவார். யார் மீது தவறு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும், வாகனச் சேதத்தை, தவறுக்கேற்றாற் போல, சம்பந்தப்பட்ட ஒரு வாகன உரிமையாளரின் காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். இதற்கு முக்கியமான ஆதாரம், போலீசாரின் அறிக்கை. இந்த அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால், கவனி – சீரமை – முடிவெடு – செயலாற்று என்னவென்று எளிதில் புரிந்துவிடும்.

விபத்து நடந்த இடம் ; 4 -வது அவென்யூ, 14 -ஆம் தெருச் சந்திப்பில்

விபத்து தேதி ; 12-ஜனவரி 2017

விபத்து நேரம்; காலை 11 மணி 20 நிமிடம்

விபத்து விவரம்

வாகனம் 1 – 4 –வது அவென்யூ வில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுமார் 75 கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. சிக்னல் ஆரஞ்சிற்கு மாறிய பொழுது வாகனம் 1, சிக்னலைக் கடந்தது.

வாகனம் 2 – 14 –ஆம் தெரு சிக்னலில் காத்திருந்தது. ஆரஞ்சிற்கு மாறிய சிக்னலில் 4-வது அவென்யூவின் கிழக்குப் பக்கமாகத் திரும்பக் காத்திருந்து, வாகனம் 1 –ஐ கவனிக்காமல், சிக்னலில் அந்தக் காரின் வலப்பக்கத்தில் மோதியது. வாகனத்தின் வேகம் 25 கி,மீ. இருக்கலாம்.

வாகனம் 1 –ன் வலப்பக்கத்திலும், வாகனம் 2-ன் முன்பக்கத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. வாகனம் 1 –ன் ஓட்டுனர் மற்றும் முன் சீட்டுப் பயணி இருவரும் பெரிய அடி ஏதும் இல்லாமல் தப்பித்தனர். வாகனம் 2 -ன் ஓட்டுனரும் பெரிய அடி ஏதும் இல்லை. இருவரும் மருத்துவ மணையில் உள் காயம் மற்றும் சுளுக்கு ஏற்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் சில வார்த்தைகளைச் சாய்வெழுத்தாகச் சொல்லியுள்ளேன்.

முதலில் கவனி – வாகனம் 1 மற்றும் வாகனம் 2-ன் ஓட்டுனர்கள், சிக்னலில் ஆரஞ்சு விழுந்ததைக் கவனித்துள்ளார்கள். ஆனால், வாகனம் 1, சிக்னலில் இன்னொரு கார் திரும்புவதற்காகக் காத்திருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதே போல, வாகனம் 2, ஆரஞ்சு விழுந்தும், 4-ஆவது அவென்யூவில் வேகமாக வரும் காரின் வேகத்தைச் சரியாகக் கவனிக்காமல், சிக்னலை நோக்கிப் (சீரமை) பயணித்தது. 4-ஆவது அவென்யூவில் வேகமாக வரும் வாகனம் 1, சிக்னலில் நின்றுவிடும் என்று முடிவு செய்து, சிக்னலை கடக்க முடிவு செய்தது. (முடிவெடு, செயலாற்று).

அதே போல, வாகனம் 1 –ன் ஓட்டுனர், சிக்னலில் ஆரஞ்சு விழுந்ததைக் கவனித்துள்ளார். வாகனம் 2, சிக்னலில் காத்திருந்ததையும் பார்த்திருப்பார். ஆக, பிரச்னை, கவனிப்பதில் இல்லை. ஆரஞ்சு சிக்னலில், கடப்பது தன்னுடைய உரிமை (சீரமை) என்று முடிவு செய்துள்ளார். தன்னுடைய காரை இதனால், சிக்னலை 75 –கி.மீ. வேகத்தில் கடக்க முடிவும் செய்துள்ளார். (முடிவெடு, செயலாற்று).

இந்த மனிதக் காரோட்டும் பிரச்னயான விபத்தில், கவனிப்பது ஒரு பிரச்னையாக இல்லை. எப்படிக் காரைச் சீரமைத்தார்கள், முடிவெடுத்தார்கள் மற்றும் செயலாற்றினார்கள் என்பதே பிரச்னை. இந்தச் சூழலில் முடிவு என்பது சில வினாடிக்குள் எடுக்க வேண்டிய ஒன்று. ஒரு 75 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் கார், நொடிக்கு ஏறக்குறைய 21 மீட்டர்கள் பயணிக்கிறது. ஒரு வட அமெரிக்க சிக்னல் ஊரின் உள்பகுதிகளில், (இரு வரைபாதைகள் கொண்ட சாலைகள்) 100 மீட்டருக்குள் கடக்கும் ஒரு தூரம். அதாவது, 5 நொடிக்குள் பயணிக்கும் விஷயம். இந்த விபத்து, 5 நொடிக்குள் நிகழ்ந்த ஒரு விஷயம். எந்த ஒரு தானோட்டிக் காருக்கும் முடிவெடுக்க 5 நொடிகள் கூடக் கிடைக்காது. இதில் உள்ள ஒரு முக்கியப் பிரச்னை, 75 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒரு காரை நிறுத்த எத்தனை இடைவெளித் தேவைப்படும்? 5 நொடிக்குள் நிறுத்தும் வேகமல்ல இது.

கூகிளின் தானோட்டிக் கார் நிகழ்வின் தலைவர், ‘நாங்கள் தானோட்டிக் காரை உருவாக்கவில்லை. தானோட்டிக் காரின் ஓட்டுனரை உருவாக்க உழைத்து வருகிறோம்’

ஆக, தானோட்டிக் கார்களை வடிவமைப்பவர்களுக்கும் இதே பிரச்னைதான். இயக்குவது மற்றும் கவனிப்பது இரண்டும் பிரச்னை இல்லை என்று சொன்னோம்.

இதற்கு முந்தைய பகுதியில், எவ்வளவு விதவிதமான உணர்விகள், அருகே, மற்றும் தூரத்தில், முன்னும், பின்னும் நிகழ்வுகளைக் காரின் கணினிக்கு உடனுக்குடன் அனுப்பி விடுகின்றன என்று பார்த்தோம். இதனால், கவனிப்பது என்பது தானோட்டிக் கார்களின் பிரச்னை இல்லை.

கடந்த 10 ஆண்டுகளாக, கார்களில் பல முக்கியத் தானியக்க முயற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக;

  • காரை நிறுத்தும் உதவி அம்சம் (park assist)
  • வரைபாதையிலிருந்து சறுக்கு எச்சரிக்கை அம்சம் (lane departure warning)
  • சாலையில் சூழலுக்கேற்ப வாகனத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அம்சம் (adaptive cruise control).

இவற்றால், கார்கள்,  ஒரு ஓட்டுனரின் மேல்பார்வையுடன் தானே நிறுத்திக் கொள்ள இயலும், வரைபாதையில் தவறாமல் பயணிக்கவும் முடியும், வேகத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் முடியும். காரின் இயக்கம் வேகத்தைக் கூட்டுவது அல்லது குறைப்பது, சீராக பயணிப்பது என்று சுறுக்கமாகச் சொல்லலாம்.

இன்றைய தானோட்டிக் கார்களின் வடிவமைப்பாளர்கள், இத்தகைய விஷயங்களை vehicle platform  என்று எளிதில் தனிப்படுத்தி விடுகிறார்கள். அதாவது, முன்னே, பின்னே, இடது, வலது பக்கம் செல்வது, வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது என்பதெல்லாம் மிகவும் எளிமையான செயலாற்றல் விஷயம்இவற்றைச் செய்ய காரின் கணினிகள், பல ஆண்டுகளாகச் சோதனை செய்யப்பட்டு நன்றாகவே இயங்கி வந்துள்ளன. இவற்றைத், தானோட்டிக் கார்களுக்காக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

சீரமைப்பு மற்றும் முடிவெடுத்தல் என்பது மனிதர்களுக்கே மிகவும் சிக்கலான விஷயம். அதுவும், நொடிகளுக்குள் முடிவெடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். தானோட்டிக் கார் என்பதன் மிக முக்கிய வடிவமைப்புச் சவால் இதுவே.

உணர்விகள் உள் அனுப்பும் குறிகைகள் முதலில், ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதை Sensor fusion  என்று வடிவமைப்பாளர்கள் சொல்கிறார்கள். பல காமிராக்கள், லேசர்கள், கேளா ஒலி (ultrasonic), ஜி,பி.எஸ்., மற்றும், ஜைரோ (gyros) போன்ற உணர்விகள் ஒவ்வொரு நொடிக்கும் அனுப்பும் குறிகைகளை, ஒருங்கிணைக்க வேண்டும். இது மிகவும் முக்கிய ஒரு தேவை. இவற்றைச் செய்ய இன்று பல வசதிகள் உள்ளன. இதற்கான கணினி மென்பொருள் நெறிமுறை (algorithm) இன்று பல கார் சம்பந்தப்பட்ட உணர்விகளுக்கு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்

கார் எங்கு உள்ளது என்பதைத் தானோட்டிக் கார்களில், முதலில் காரே முடிவெடுக்க வேண்டும். நிகழ்வுகள் அனைத்தும் காரின் இருப்பிடத்தைச் சார்ந்தது (location). இதை localization  என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு, மனித ஓட்டுனர்களுக்கு 4-வது அவென்யூவில் பயணிக்கிறோம் என்று வழக்கமாகப் பயணிப்பதால் தெரியும். தானோட்டிக் காருக்கு ஜி.பி.எஸ். மூலம் கிடைக்கும் இருப்பிட குறிகை, மற்றும் காரின் கணினியில் உள்ள தரவு கொண்டு இந்த முடிவை ஒவ்வொரு நொடியும் முடிவெடுக்க வேண்டும்.

இயங்கும் காரைச் சுற்றி என்ன உள்ளது என்பதையும் தானோட்டிக் கார் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். தனக்கு முன்னால், பின்னால், இடப்புறத்தில், வலப்புறத்தில் என்ன இருக்கிறது, சாலையில் என்ன சைகைகள் (traffic signs) உள்ளன, சிக்னல் மற்றும் மின், சிக்னல், சைகைகள் கம்பங்கள் எங்கு உள்ளன என்பதும் காருக்கு தெரிய வேண்டும். இதை World Model என்று பொறியாளர்கள் அழைக்கிறார்கள்.

தானோட்டிக் காரின் மிக முக்கிய முதல்படி இந்தச் சுற்றுப்புறமறிதல். நமக்கு வெகு எளிதான இந்த விஷயம், தானோட்டிக் கார்களுக்கு மிகப் பெரிய சவால். இதை

Sensing is easy, perception is difficult

என்று சொல்வதுண்டு. முடிவெடுத்தலுக்கு மிக முக்கிய முன் படிச் சுற்றுப்புறமறிதல். பார்வை மூலம் நாம் இந்த முடிவைக் கண்ணாடிகள் உதவியினாலும் செய்கிறோம். கார்கள், பல உணர்விகளின் குறிகை ஒருங்கிணைப்பு, மற்றும், ஜி.பி.எஸ். குறிகைகள், ஜைரோக்கள் உதவியினாலும் (ஜைரோக்கள் ஒரு வாகனம் எவ்வளவு சாய்ந்துள்ளது, மற்றும் சாலை சம நிலையிலிருந்து எவ்வளவு எந்தப் பக்கத்தில் சாய்ந்துள்ளது போன்ற விஷயங்களை டிஜிட்டல் குறிகைகளாய்த் தரும் உணர்வி) காரின் கணினி மூலம் உணர்கிறது.

ஒன்றை இங்குக் குறிப்பிட வேண்டும் – நாம் சுற்றுப்புறத்தை அறிதலுக்கும் ஒரு எந்திரம் அறிதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அடுத்த காரில் உள்ள நபர் அணிந்திருக்கும் தொப்பி, கணினிக்கு முக்கியமல்ல. சாலையில் முன்னே செல்ல எது தேவையோ அது மட்டுமே முக்கியம். அத்துடன் எப்படி முன் செல்வது – பாதை, கோணம், எத்தனை வேகம், எந்த வரைபாதையைத் தாண்டிச் செல்ல வேண்டும், எந்த சைகைகளை இந்த முடிவில் கொள்ள வேண்டும் என்பவை காரின் கணினிக்கு முக்கியம். இதை trajectory generation என்று சொல்லப்படுகிறது. சுற்றுபுறமறிதலினால், தானோட்டிக் கார்கள் பல கோடி கணக்கிடல்கள் மூலம் உணருகிறது.

கூகிளின் தானோட்டி கார் ப்ராஜக்டின் தலைவர் இந்தக் கார்களின் பார்வையில் உலகம் எப்படி இருக்கும் என்பதை இங்கு அழகாக விளக்குகிறார். நாம் பார்ப்பதைப் போல இந்தக் கார்கள் தான் இயங்கும் பாதையைப் பார்ப்பதில்லை.

கடைசியாக, மிக முக்கியமான முடிவெடுத்தல் தானோட்டிக் கார்களில் எப்படி நிகழ்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம். இதன் பின்னணி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (artificial intelligence technology ) சமீபத்திய அபார வளர்ச்சி. இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பற்றிய சுறுக்கமான வரலாற்றிற்குப் பிறகு, இன்றைய தொழில்நுட்பம் எப்படி தானோட்டிக் கார்களின் மிடிவெடுத்தல் பிரச்னைகளை தீர்க்கிறது என்று பார்ப்போம்.

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Diagnostic computer பிழை ஆய்வுக் கணினி
Level flight சம அளவில் பறப்பது
Traffic lanes வரைபாதை
Park assist feature காரை நிறுத்தும் உதவி அம்சம்
Lane departure warning feature வரைபாதையிலிருந்து சறுக்கு எச்சரிக்கை அம்சம்
Adaptive cruise control feature சூழலுக்கேற்ப வாகனத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அம்சம்
Ultrasonic கேளா ஒலி
Algorithm கணினி மென்பொருள் நெறிமுறை
Location இருப்பிடம்
Traffic signs சாலைச் சைகைகள்
Artificial intelligence (AI) technology செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

சொல்வனம் – மே 2017